டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு பற்றிய புதிய தகவல் ஒன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ எஸ் அதிகாரி பாலச்சந்திரன் ஆட்சியர் விஷ்ணுவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன் கூறியதாவது:-
“டிஎன்பிஎஸ்சி தேர்வில் அச்சமின்றி தேர்வு எழுத அனைத்து வகையான ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது . குரூப் 4 தேர்வுக்கு திட்டமிட்டபடி மார்ச் மாத மத்தியில் அல்லது இறுதியில் அறிவிப்பு வெளியிட அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் இடம்பெறும் கேள்விகளுக்கான பாடத்திட்டம் தயார் செய்யும் பணி ஓரிரு நாட்களில் நிறைவு பெறும்.
அரசின் பிற தேர்வுகள் நடைபெறும் நாட்களை தவிர்த்து, தேதிகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மீது தேர்வர்களுக்கு தற்போது மிகுந்த நம்பிக்கை எழுந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு வினாத்தாள்கள் கசிவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிந்த பின்னர் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லும் வழியில் திருத்தம் செய்யப்படும்.பிரச்சனைகளை தவிர்க்க விடைத்தாள் யாருடையது என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் யாருடையது என்பதை கணினி மூலம் மட்டுமே கண்டறிய முடியும். விடைத்தாள்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் கேள்விகள் மட்டுமே கிடைத்திருக்கும் மையங்களுக்கு கணினி மூலம் அனுப்ப திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை,அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆதார் அட்டையுடன் ஓ.டி.ஆர் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 28 ம் தேதியுடன் நிறைவு பெற்றுவிட்டது மீண்டும் நீட்டிப்பு செய்ய வாய்ப்பில்லை” என தெரிவித்தார்.