Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புமாதம் ரூ.1,30,800 ஊதியத்தில் வேலை... வெளிவந்த அறிவிப்பு

    மாதம் ரூ.1,30,800 ஊதியத்தில் வேலை… வெளிவந்த அறிவிப்பு

    தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர்(மாற்றுத்திரனாளிகளுக்கான மாநில ஆணையரகம்) பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

    அந்த அறிவிப்பின்படி, மொத்தமாக 7 காலியிடங்கள் உள்ளன. அவற்றுக்கு மாத ஊதியமாக ரூ.35,600 – 1,30,800 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலிப்பணியிடங்களுக்கு, விண்ணப்பிக்க வயது வரம்பானது, 1.7.2022 தேதியின்படி, அதிகபட்ச வயதாக 37 இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    அதேபோல, இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் உளவியல், சமூக வேலை அல்லது சமூகவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    மேலும், அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள், கணினி வழி ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் இட ஒதுக்கீடு விதிகளின் படி தேர்வு செய்யப்படுவார்கள். 

    இப்பணியிடங்களுக்கு www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதியாக 7-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க நிரந்தப் பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

    இப்பணியிடங்கள் குறித்து மேலும் விவரங்கள் அறிய, கீழ்காணும் லிங்கை க்ளிக் செய்யவும்,   https://www.tnpsc.gov.in/Document/tamil/35_2022_JRO_TAM.pdf

    இந்தியா vs இலங்கை; அமர்க்களமாக அமையுமா இன்றைய ஆட்டம்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....