Monday, March 18, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்நமக்குத் நாமே மெசேஜ் அனுப்பும் முறை; கணினி பயன்பாட்டிற்கு விரிவுபடுத்த வாட்சப் திட்டம்..

    நமக்குத் நாமே மெசேஜ் அனுப்பும் முறை; கணினி பயன்பாட்டிற்கு விரிவுபடுத்த வாட்சப் திட்டம்..

    வாட்சப் நிறுவனம் புதிய வசதியை வழங்கும் முன்னெடுப்பை தற்போது நிகழ்த்தி வருகிறது. 

    உலகில் அதிகளவு அனைவராலும் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்றச் செயலி என்றால் அது வாட்சப் செயலியே. தற்போது, அனைத்து வயதினராலும் பயன்படுத்தப்படும் செயலியாகவும் வாட்சப் விளங்கி வருகிறது. அனைவரிடமும் வாட்சப் சென்று சேர்ந்ததன் முக்கியக் காரணம், பயன்படுத்த இது மிகவும் எளிதாக உள்ளதென்பதே. 

    மேலும், வாட்சப் நிறுவனம் அவ்வப்போது தங்களது பயனர்களை ‘அப்டேட்’ மூலம் கவர்ந்திழுத்த வண்ணம் இருக்கும். அந்த வகையில்தான் குரூப் சாட், இமோஜி, ஸ்டேட்டஸ், ஸ்டிக்கர் எனப் பல அம்சங்களை வாட்சப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 

    சமீபத்தில் வாட்சப் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய முன்னெடுப்பை நிகழத்தியது. அதன்படி, வாட்சப் பயனாளர்கள் தமக்குத் தாமே மெசேஜ் செய்துக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த அம்சமானது, தற்போது பரிசோதனை முறையில் உள்ளதாகவும், அதேபோல கணினி பயன்பாட்டிற்கு விரிவுபடுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பயன்பாட்டிற்கு இந்த அம்சம் விரைவில் வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

    சென்னை மெட்ரோவில் வாரிசு பட புரோமஷன்…வெளிவந்த வீடியோ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....