பெண்கள் முகத்தை அழகாக பராமரிக்க வேண்டும் என்று நினைப்பர் ஆனால், அதற்கான நேரம் கொடுக்காததால் அதிக விளைவுகளைச் சந்திப்பர்.பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அப்படி தான். வேலைக்கு செல்வதால் தன்னை அழகுபடுத்திக் கொள்ள நேரம் ஒதுக்குவதில்லை. திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்கிறோம், பல காட்சிகளுக்கு செல்கிறோம். இவற்றுக்கு கொஞ்சம் முகப்பொலிவுடன் சென்றால் பார்க்க அழகாகத் தானே இருக்கும். அதற்கென்று நாம் தனியாக பணம் செலவு செய்ய வேண்டாம் வீட்டிலேயே செய்யலாம்.
உங்களின் முகப்பொலிவிற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.
- மஞ்சளும் தேனும் கலந்து வாரம் இருமுறை முக பூச்சாக பயன்படுத்தி வந்தால் முகம் எப்போதும் இருப்பதை விட பொலிவுறக் காட்டும். மஞ்சளில் இயற்கையாகவே கிருமி நாசினி தன்மைக் கொண்டதால் முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகளை நீக்கிவிடும்.
- மஞ்சளும் பாலும் கலந்து அதனுடன் வட்டமாக வெட்டிய தக்காளியை சிறிது நேரம் ஊறவைத்து முகத்தில் தேய்த்து வந்தால் நல்ல பலன்களைக் காணலாம். பால் முகத்தை மிருதுவாக மாற்ற உதவும்.
- மஞ்சளுடன் நல்ல கெட்டியான தயிர் சேர்த்து கலந்து முகத்திற்கு தடவி வருவதும் நல்ல பயனைத் தரும்.
- கடலை மாவும் அதனுடன் முல்தாணி மெட்டியும் சேர்த்து ரோஸ் வாட்டர் கலந்து தடவி வந்தால் முகம் பொலிவாகவும் மிருதுவாகவும் மாறும். முகத்திற்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.
- பப்பாளியும் தேனையும் குழைத்து முகத்தில் தடவி வந்தால் முகம் பளப்பளப்பாக மாறும்.
- கற்றாழை கூழும் மஞ்சளும் கலந்து வாரம் ஒரு முறை தடவி வந்தால் முகத்தில் கருப்பு திட்டுகள் நீங்கி முகம் தெளிவு பெறும்.
- ஆலிவ் எண்ணெயும் தேனும் கலந்து முக மூடியாக பயன்படுத்தி வந்தால் முகம் எப்போதும் இருப்பதை விட சற்று நேரத்தில் நல்ல பயனைக் கொடுக்கும்.
- எலுமிச்சை சாறுடன் சிறிது சர்க்கரை சேர்த்து கரைத்து முகத்தில் நன்கு தேய்த்து வர முக அழகு கூடும்.
- தக்காளியுடன் சர்க்கரையைச் சேர்த்து குழைத்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பொலிவு பெறும்.
- சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் குழைத்து முகத்தில் தேய்த்து வர முக பொலிவு கூடும்.
இவற்றை எல்லாம் நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்கள் நீங்களே நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.