Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்2019 இல் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலுக்கு இப்பதான் முடிவு வந்திருக்கு! விஷால், நாசருக்கு பதவி!

    2019 இல் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலுக்கு இப்பதான் முடிவு வந்திருக்கு! விஷால், நாசருக்கு பதவி!

    பல்வேறு இன்னல்களை தாண்டி ஒரு வழியாக நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலுக்கு இப்போதுதான் முடிவு எட்டப்பட்டுள்ளது. 

    2019 இல் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக, வாக்கு எண்ணிக்கையானது நிறுத்தி வைக்கப்பட்டது. இப்படியான சூழ்நிலையில் கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சங்க தேர்தல் குறித்த விவகாரங்கள் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் வழங்கப்பட்ட தீர்ப்பில், நடத்தப்பட்ட நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும் ஏற்கனவே பதிவான ஓட்டுகளை நான்கு வாரத்திற்குள் எண்ணி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

    இந்த உத்தரவின் பெயரில் நேற்று  2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்படி நாசர் மற்றும் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி தேர்தலில் வெற்றி பெற்றது. 

    நடிகர் சங்க தலைவராக நாசர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாசர் அவர்கள் இத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நடிகர் பாக்யராஜ் அவர்களை 647 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். நாசர் அவர்கள்  1701 வாக்குகளும், பாக்யராஜ் அவர்கள் 1054 வாக்குகளும் பெற்றிருந்தார். 

    அதேப்போல், நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஷால் அவர்களும்,  நடிகர் சங்க பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட கார்த்தி அவர்களும் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

    இந்த வாக்கு எண்ணிக்கையின் போது, பதிவான வாக்குகளை விட வாக்குப்பெட்டியில் அதிக வாக்குசீட்டுகள் இருப்பதாக கூறி பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியினர் குற்றம் சாட்டினர். இது குறித்து விஷால் தலைமையிலான பாண்டவர் அணியிடம் கேட்ட போது, தேர்தல் அதிகாரிகள்தான் இந்நிகழ்வுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறினர்.

    மேலும், நடிகர் சங்கத்திற்கு வருவாய் ஈட்டும் வகையில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை முன்னிலைப்படுத்தியே பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ளதாக கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்போது, பாண்டவர் அணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளதால் இம்முறை நடிகர் சங்கத்திற்கு வருவாய் ஈட்டும் கட்டிடத்தின் வேலை முழுவதுமாய் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....