Sunday, March 17, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புகுழந்தைகளுக்கு ஏற்ற புதுவிதமான உணவு; ஆட்டுக்கறி கோலா உருண்டை

    குழந்தைகளுக்கு ஏற்ற புதுவிதமான உணவு; ஆட்டுக்கறி கோலா உருண்டை

    ஆட்டுக்கறியை வைத்து எப்போதும் குழம்பு, பிரியாணி என்று சிலவற்றை மட்டும் செய்வதை விட, புதுவிதமாக குழந்தைகளுக்கு ஆட்டுக்கறி கோலா உருண்டைகளை  செய்துக் கொடுக்கலாம்.

    தேவையான பொருள்கள்: 

    1. ஆட்டுக் கொத்துக்கறி- 300 கிராம்
    2. வெங்காயம்- 2 எண் 
    3. உடைத்தக் கடலை (பொட்டுக்கடலை)- 2 மேசைக்கரண்டி
    4. சோம்பு- 1 தேக்கரண்டி
    5. மஞ்சள்தூள்- கால் தேக்கரண்டி 
    6. மிளகாய்த்தூள்- ஒரு தேக்கரண்டி
    7. கரமசாலாத்தூள்- ஒரு தேக்கரண்டி 
    8. இஞ்சி பூண்டு விழுது- ஒரு தேக்கரண்டி 
    9. மல்லித்தழை- ஒரு கைப்பிடி 
    10. கருவேப்பிலை- சிறிதளவு
    11. எண்ணெய்- தேவையான அளவு
    12. உப்பு- தேவையான அளவு

    ஆட்டுக்கறி கோலா உருண்டை செய்முறை: 

    • ஒரு கடாயில், தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 
    • வெங்காயம் சற்று வதங்கியவுடன், ஆட்டுக் கொத்துக்கறியை சேர்க்க வேண்டும். அதனுடன், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரமசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 
    • பின்பு, உப்பு மற்றும் மல்லித்தழை தூவி, தண்ணீர் ஏதும் சேர்க்காமல் கறியை 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். ஆட்டுக்கறியில் இருந்து தண்ணீர் வந்தால், அந்த நீரை வடிகட்டிவிட்டு ஆட்டுக்கறியை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். 
    • பிறகு ஆட்டுக்கறி ஆறியதும், அதை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த ஆட்டுக்கறியுடன் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். 
    • அதோடு, பொட்டுக் கடலையை அரைத்து சேர்க்க வேண்டும். மேலும், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
    • விருப்பப்பட்டால், மேலும் சிறிது மல்லித்தழையைச் சேர்த்துக் கொள்ளலாம். அரைத்த ஆட்டுக்கறியை சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 
    • ஒரு கடாயில் உருண்டைகளை பொரிப்பதுக்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அது சூடேறியதும், உருண்டைகளைச் சேர்த்து பொறித்து எடுத்தால் ஆட்டுக்கறி கோலா உருண்டைகள் தயார். (எலும்பு இல்லாத ஆட்டுக்கறி வாங்கியும் செய்யலாம் அல்லது கொத்துக்கறி என்று கேட்டால் கடைகளிலேயே கிடைக்க வாய்ப்புள்ளது.) 

    சத்து: ஆட்டுக்கறியில் புரதச்சத்து நிறைந்து உள்ளது. மேலும் அதில், வைட்டமின் மற்றும் கனிமச் சத்து உள்ளிட்ட சத்துகள் காணப்படுகிறது.

    பன்னீர் சில்லி இப்படி செய்தா, தொட்டுக்க ரொம்ப நல்லாருக்கும்… 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....