Saturday, April 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவுக்காக விளையாடிய பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் ஓய்வு!

    இந்தியாவுக்காக விளையாடிய பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் ஓய்வு!

    இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் முரளி விஜய் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகப் அறிவித்துள்ளார்.

    முரளி விஜய் – இந்திய அணிக்காக விளையாடி வந்தார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 2008-ஆம் ஆண்டு அறிமுகமானார். இதுவரையில் இந்தியாவுக்காக 61 டெஸ்டுகள், 17 ஒருநாள், 9 இருபது ஓவர் போட்டிகளில் முரளி விஜய் விளையாடியுள்ளார். டெஸ்ட்டில் 12 சதங்களும், 15 அரை சதங்களும் எடுத்து மொத்தமாக  3982 ரன்கள் எடுத்துள்ளார்.

    பிரபல கிரிக்கெட்டராக திகழ்ந்த முரளி விஜய் இந்திய அணிக்காக கடைசியாக கடந்த 2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அதன்பிறகு, சர்வதேச போட்டிகளில் முரளி விஜய் விளையாடவில்லை. 

    இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முரளி விஜய் அறிவித்துள்ளார். மேலும், இவர் உலகளவில் புதிய வாய்ப்புகளைத் தேடிச் செல்வதாகக் கூறியுள்ளார். மற்ற நாடுகளில் நடைபெறும் இருபது ஓவர் லீக் போட்டிகளில் முரளி விஜய் பங்கேற்கவுள்ளார்.

    இந்தியா நடத்தும் தொழில்முறை கிரிக்கெட்டான ஐபிஎல் தொடரில், முரளி விஜய் 106 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், தில்லி டேர்டெவில்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் போன்ற அணிகளுக்கு கேப்டனாகவும் இவர் செயல்பட்டுள்ளார். 

     2010, 2011-ம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றபோது அந்த அணியின் முக்கிய வீரராக முரளி விஜய் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    பாகிஸ்தான்-வங்கதேசம் நடுவில் ‘இந்தியா’ என பெயர் சூட்டி மகிழும் தம்பதி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....