இன்று முதல் அடுத்த இரு நாட்களுக்கு (03-02-2022 முதல் 05-02-2022 வரை) தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிகழும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
06 – 02-2022 முதல் 07 -02-2022 வரை வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிகழும் எனவும வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு த்துடன் காணப்படும் என்றும், காலை வேளையில் இலேசான பனி மூட்டம் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை எனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.