கர்நாடகாவில் திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடிய பெண் மீது பணமழை பொழிந்த காங்கிரஸ் தொண்டர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், தார்வாத் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் ஹூப்ளி நகரைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் சிவசங்கர் ஹம்பன்னா என்பவர் கலந்துகொண்டார்.
இந்த திருமண நிகழ்ச்சியில் பெண் ஒருவர் நடனம் ஆடியுள்ளார். அவருடன் சேர்ந்து காங்கிரஸ் தொண்டரான சிவசங்கரும் நடனம் ஆடியுள்ளார். அப்போது தனது கையில் வைத்து இருந்த ரூபாய் நோட்டுகளை ஒவ்வொன்றாக அங்கு நடனம் ஆடிய பெண்ணின் மீது வீசியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கர்நாடக பாஜக பொதுச்செயலாளர் மகேஷ் தெங்கின்காய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், காணொளியை தொலைக்காட்சியில் பார்த்தாகவும் நடனம் ஆடும் பெண் மீது பணம் வீசப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு பணத்தின் அருமை தெரியவில்லை என்றும், காங்கிரசின் கலாசாரம் என்ன என்று இதுபோன்ற நிகழ்வுகளால் தெரிய வருவதாகவும் இதனை பல முறை தாம் பார்த்து இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து அவர், இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், காங்கிரஸ் கட்சி இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனிடையே, இந்தச் சம்பவத்திற்கு பாஜக செய்தித்தொடர்பாளர் ரவி நாயக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜி-பே மூலமாக நூதன முறையில் மோசடி; தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை