இந்தியாவில் மாருதி சுஸுகி ஜிம்னி 5-டோர் வேரியன்ட் கார் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கார் வணிகத்துக்கு எப்போதுமே மவுஸ் உள்ளது. இதை கார் நிறுவனங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளன. இதனால், அவ்வபோது புதிய மாடல்களுடன் கார் நிறுவனங்கள் சந்தைக்கு வருகின்றன. உற்பத்தியும் செய்யப்படுகின்றன.
அந்த வகையில், தற்போது மாருதி சுஸுகி ஜிம்னி 5-டோர் வேரியன்ட் கார் இந்தியாவில் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஜிம்னி காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
மாருதி சுசூகி ஜிம்னியை K15C டூயல்ஜெட் இஞ்சினுடன் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய எஞ்சின் 103hp ஆற்றலையும் 137nm டார்க்கையும் வழங்குகிறது. 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாருதி சுஸுகி ஜிம்னி 5-டோர் வேரியன்ட் காரின் விற்பனைக்கான அறிமுகமும் விரைவில் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துணிவா? வாரிசா? – என்ன சொன்னார் நடிகர் வடிவேலு..