Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார ராசி பலன்கள்… மேஷம் முதல் கடகம் வரை

    இந்த வார ராசி பலன்கள்… மேஷம் முதல் கடகம் வரை

    மார்ச் இரண்டாம் வார ராசிப் பலன்கள். சோம வார விரதம் கடைபிடிக்கும் நாட்கள் என்பதால், சிவனை நினைத்து ஓம் நமசிவாய மந்திரத்தை மனதில் நினைத்தபடி இருந்தால் நன்மைகள் நிகழும். 

    மேஷம்:

    ariesமேஷ ராசிக்காரர்களே, இந்த வாரம் தன லாபம் உங்களுக்கு அதிகரிக்கும் நாட்களாக உள்ளன. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற அதிக வாய்ப்புகள் இருக்கிறது. நீங்கள் செய்யும் வேலைகளுக்கு உயர் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுகள் குவியும். குடும்பத் தலைவி மூலமாக முன்னேற்றம் அதிகரிக்கும். இந்த வார நாட்கள் மகிழ்ச்சிகரமான நல்ல நாட்களாக அமையும். அம்மன் வழிபாடு செய்யுங்கள் அவள் உங்களுக்கு எல்லா நிலையிலும் துணை நிற்பாள்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரார்களே, இந்த வாரம் உங்களுக்கு தொழிலில்  நல்ல முன்னேற்றம் rishabam ஏற்படும். மேலும் அரசு ஊழியர்கள் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். வீட்டில் மகிழ்ச்சிகள் பொங்கும் நல்ல நாட்களாக உள்ளன. பண தேவை ஏற்பட்டாலும் அதை நீங்கள் திறம்பட கையாளுவீர்கள். முருகன் வழிபாடு செய்வது மேலும் நன்மையைத் தரும்.

     

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு நல்ல நன்மைகள் அதிகம் நடக்க mithunam கூடிய நாட்களாக உள்ளன. பணம்,பொருள், ஆடை, ஆபரணங்கள் என உங்களுக்கு பிடித்தது அனைத்தும் கிடைக்கும். தொழிலில் நல்ல வரவுக் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நல்ல நன்மைகள் ஏற்படலாம். நினைத்த காரியங்கள் நடக்கக் கூடிய நல்ல நாட்களாக உள்ளன. சிவன் வழிபாடு மனதிற்கு நிம்மதியையும் அமைதியையும் தர வல்லது.

    கடகம்: 

    கடக ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நன்மைகள் cancer நடக்கும் நாட்களாக உள்ளன. உங்களின் விடாமுயற்சிகள் நல்ல பலன்களைத் தரும். சில இடையூறுகள் வந்தாலும் அதை நீங்கள் அமைதியாய் வென்று விடுவீர்கள். வண்டி வாகனங்கள் ஓட்டும் போது கவனமாக இருப்பது நல்லது. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தீமைகள் விலக விநாயக வழிபாடு நன்மையைத் தரும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....