மார்ச் ஒன்று மகா சிவராத்திரி. அன்று விரதம் இருந்து எல்லாம் வல்ல சிவனை வழிபாடு செய்வது அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளைத் தரும். அம்பிகை எப்படி தூய மனதுடனும் மன பக்தியுடனும் இருந்தாரோ அப்படி இருந்தால் நினைக்கின்ற காரியங்களை சாதிக்க முடியும்.
மேஷ ராசி:
மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நடக்க கூடிய சூழல் இருக்கிறது. வேலை தேடுபவர்களுக்கும், பதவி உயர்வை எதிர்ப்பார்த்து இருந்தவர்களுக்கும் நிச்சயம் நன்மை உண்டாகும். பெண்களின் உடல் நிலை, வேலை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி உறவில் புரிதலும் அன்பும் நிலைக்கும். மேஷ ராசிக்காரர்கள் முதற்கடவுளான விநாயகரை வழிப்பட்டால் சகல சௌபாக்கியமும் கிட்டும்.
ரிஷப ராசி:
ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மைகள் நடக்கும் என்றாலும் சிறிது கவலை தரக் கூடிய காரியங்கள் நடக்க வாய்ப்பு உண்டு. அதனால், பேச்சைக் குறைத்து அன்றாட வேலைகளில் கவனம் செலுத்துதல் அவசியம். யார் என்ன சொன்னால் நமக்கென்னவென்று அமைதியாய் இருங்கள். வீட்டில் மகிழ்ச்சியும், சுப நிகழ்ச்சிகளும் நடைபெற வாய்ப்பு உள்ளது. இவ்வேளையில் சிவனை நினைத்து விரதம் இருந்து நன்மை பெறுங்கள்.
மிதுன ராசி:
மிதுன ராசிக்காரர்களுக்கு அதிக கவனம் தேவைப் படக் கூடிய நாட்களாக உள்ளன. வாகனங்கள் ஓட்டும் போதும் வெளியில் செல்லும் போதும் கவனமாக இருப்பது நல்லது. பிறர் சொல்லவதை நம்ப வேண்டாம். உங்களின் அன்றாட வேலைகளில் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவி இடையில் சிறிய சண்டைகள் வரலாம், விட்டுக் கொடுத்து போவது நல்லது. மிதுன ராசிக்காரர்களுக்கு என்றும் குல தெய்வ வழிபாடு நன்மையத் தரும்.
கடக ராசி:
கடக ராசிக்காரர்களுக்கு, பொறுமையும் அமைதியும் தேவைப்படும் நாட்களாக உள்ளன. சந்திராஷ்டமம் இருப்பதால் அதிகம் பேச வேண்டாம். மனதை ஒரு நிலைப்படுத்தி, சாந்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள். யாரேனும் உங்களைக் குறைக் கூறினாலும் பொறுமையாக இருங்கள். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சிவனை வழிபாடு செய்யுங்கள், ஓம் எனும் மந்திரத்தை மனதில் நிறுத்தினால் தீமைகள் விலகும்.