அனைத்து ராசிக்கார்களும் மகா சிவ ராத்திரியன்று உறங்காமல் விழித்து எல்லாம் வல்ல சிவ பெருமானை வழிபட்டால் தடைகள் விலகி அனுகூலமான வழிகள் பிறக்கும். வில்வ இலையை வைத்து வழிபாடு செய்வது அதிக நன்மையைத் தரும்.
சிம்ம ராசி:
சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் நாட்களாக இருந்தாலும், சில தீமைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு, ஆகையால் சற்று கவனமாக இருங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும் நாட்களாக இருக்கும். உங்களுக்கு விருப்பமான பொருட்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குல தெய்வ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்வது நல்லது.
கன்னி ராசி:
கன்னி ராசிக்காரர்களுக்கு, நிதானமும் பொறுமையும் தேவைப்படுகின்ற நாட்களாக உள்ளன. கடன் தொல்லைகள் வரலாம், அதனால் முடிந்த வரை யாரிடமும் பணம் வாங்க வேண்டாம். பொறுமையாக இருந்து காரியத்தைச் சாதிக்க முற்பட்டால் நல்லதே நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு வர வாய்ப்பு உண்டு. கன்னி ராசிக்காரர்களே, நீங்கள் துர்கை அம்மனை வழிபடுங்கள் தைரியமும் சாந்தமும் கிடைக்கும்.
துலாம் ராசி:
துலாம் ராசிக்காரர்களுக்கு, எதிர்ப் பார்த்திராத நன்மைகள் வந்துச் சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு நிச்சயம் ஆகக் கூடும். திருமணம் ஆகியவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்க அனுகூலம் உண்டு. உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்து வேலைகளைத் தொடங்கினால் நன்மையிலேயே முடியும்.
விருச்சிக ராசி:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு, அதிக நன்மைத் தரக் கூடிய நாட்களாக இந்நாட்கள் உள்ளன. தொழிலில் தன லாபம் அதிகரிக்கும். விளையாட்டு போட்டிகளில் உள்ளவர்களுக்கு வெற்றி கிட்டும். அலுவலகத்தில் நற்பெயர் உண்டாக வாய்ப்பு உண்டு, மேலும் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றமும் உத்வேகமும் புதிய உற்சாகமும் பிறக்கும். கந்தா! கடம்பா! என முருகனை நினைத்துக் கொண்டே இருங்கள் நன்மை உண்டாகும்.
மேஷம் முதல் கடகம் வரை உள்ள ராசி பலன்களை இங்கே பார்க்கவும்