Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்மகளிர்ஒரு ஆண் கோபப்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா? இதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!

    ஒரு ஆண் கோபப்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா? இதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்!

    ஒரு ஆண் சில முக்கிய விடயங்களுக்கு கோபப்படுவார், என்பதை நாம் தெரிந்து வைத்துக் கொண்டால், அவருக்கு கோபத்தை ஏற்படுத்தாத வகையில், நடந்துக் கொள்ளவும் அவ்வாறான சூழலை உருவாக்காமல் இருக்கவும் உதவும். இப்படி செய்வது அன்பையும் பிணைப்பையும் அதிகரிக்கும். சரி வாருங்கள் தெரிந்துக் கொள்வோம் ஆண்கள் எந்தெந்த விடயங்களுக்கு கோபப்படுவார்கள் என,

    • ஒரு ஆண் தனது உணர்வுகளை அடக்க முடியாத சூழல் உருவாகும் போது, நிச்சயம் உணர்ச்சிவசப்பட்டு கோபத்தை வெளிப்படுத்துவார். அது அன்போ காதலோ, நட்போ, இடமோ பொருளோ ஏதுவாக இருந்தாலும் சரி. 
    • தான் மன்னிப்பு கேட்டும் ஒரு விடயம் மாறாமல் இருப்பதை ஒரு ஆண் ஏற்கவே மாட்டார். அப்போது அவருக்கு மிகுந்த கோபம் வரும். என்ன இது? நாம் மன்னிப்பு கேட்டும் இவர்கள் இப்படி நடந்துக் கொள்கிறார்களே? என்ற ரீதியில் அந்த கோபம் வெளிப்படும். 
    • நீங்கள் விரும்பும் ஆண், உணர்வுப் பூர்வமாக தங்களை ஒதுக்குகிறார் என்றால், நிச்சயம் அவர், உங்கள் மீது அதிக கோபத்துடன் இருக்கிறார் என்பதை எளிமையாக புரிந்துக் கொள்ளலாம். 
    • மிக சுலபமாக, தான் பார்த்ததும் ஒரு கணிப்பை அவர் வெளிப்படுத்தினார் என்றால் அப்போது அவருக்கு அந்த விடயத்தில், கோபம் வர தொடங்குகிறது என்றே எண்ணலாம். 
    • பழைய விடயங்களை எடுத்து, நீங்கள் பேசும் விடயத்துடன் தொடர்புப்படுத்தி பேசினார் என்றால், அவர் நிச்சயம் கோபத்தின் உச்சியில் இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 
    • நீங்கள் முழுவதுமாக நம்பியிருந்த ஆண், உங்கள் மீது கோபம் கொண்டாரானால், உங்களுக்கு செய்யும் உதவிகளைக் குறைத்துக் கொண்டு அதற்கான வேறு வழியை வைத்துவிட்டு, உங்களிடம் இருந்து  தள்ளி செல்ல நினைப்பார். இதுவே கோபத்தின் உச்சக்கட்டம் எனலாம். 
    • உங்களை ஒரு கருத்தில் இருந்து, வேறொரு கருத்திற்கு மாற்ற முயற்சிப்பார். நீங்கள் செய்யும் செயல் அவருக்கு பிடிக்கவில்லை என்றால், இந்தக் கருத்து தவறு என்பதை உங்களையே உணர வைத்து விடுவார். அப்படி செய்தார் என்றால் அவர் உங்கள் மீது கோபத்தில் உள்ளார் என்பதை புரிந்துக் கொள்ளலாம். 
    • சில சமயங்களில், நீங்கள் செய்யும் செயல்கள் அவருக்கு பிடிக்கவில்லை என்பதை, இந்த வேலைக்கு நீ சரியில்லை என்றும் உனக்கு வேலை செய்யவே தெரியாது என்பது போல் நடந்துக் கொண்டார் என்றால், அவரின் கோபம் அப்போது தொடங்குகிறது எனலாம். 
    • காதல் மற்றும் நட்பு உறவுகளில் நீடிப்போர்களுக்கு நிச்சயம் சண்டைகள் வரும்போது அவர், நீ என்னை விட்டு செல் என்று கூறினால், அவர் உங்களின் மீது அதீத கோபத்தில் உள்ளார், என்பதை நீங்கள் புரித்துக் கொள்ளலாம். 

    அதீத கோபம் அதீத அன்பையும் காதலையும் வெளிப்படுத்தும் கருவி ஆகும். உண்மையான ஒரு ஆணின் கோபம், நிச்சயம் உங்களின் மீது அவர் வைத்துள்ள அன்பால் மட்டுமே இருக்கும், என்பதை புரிந்துக் கொண்டால் கோபத்தால் வரும் பெரும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.   

    இதையும் படியுங்கள், கோலியின் தொடர் சொதப்பல் ; வீழும் பெங்களூர்! – புள்ளிப்பட்டியலில் நேர்ந்த மாற்றம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....