Thursday, April 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுஜராத்தில் அடுத்தடுத்து இரு முறை நிலநடுக்கம்

    குஜராத்தில் அடுத்தடுத்து இரு முறை நிலநடுக்கம்

    குஜராத் கட்ச் பகுதியில் நேற்று காலை இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

    குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் பகுதியில் நேற்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 4.2 ஆகப் பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    நேற்று காலை 6.38 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கட்ச் மாவட்டம் தூத்கய் கிராமத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. மேலும், முன்னதாக காலை 5.18 மணியளவில் 3.2 என்ற ரிக்டர் அளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்த நிலஅதிர்வு கட்ச் மாவட்டத்தின் காவ்தா கிராமத்தில் இருந்து 23 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. 

    இந்த அடுத்த அடுத்த நில அதிர்வுகளால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்ச் பகுதியில் கடந்த 2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,800 பேர் உயிரிழந்தனர். 1.67 லட்சம் பேர் காயமடைந்தனர். இதனால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து சேதமாகின.

    மேலும், இந்த கட்ச் பகுதியானது நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ள இடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்தியாவுக்காக விளையாடிய பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் ஓய்வு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....