குஜராத் கட்ச் பகுதியில் நேற்று காலை இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் பகுதியில் நேற்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 4.2 ஆகப் பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை 6.38 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கட்ச் மாவட்டம் தூத்கய் கிராமத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. மேலும், முன்னதாக காலை 5.18 மணியளவில் 3.2 என்ற ரிக்டர் அளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்த நிலஅதிர்வு கட்ச் மாவட்டத்தின் காவ்தா கிராமத்தில் இருந்து 23 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.
இந்த அடுத்த அடுத்த நில அதிர்வுகளால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்ச் பகுதியில் கடந்த 2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3,800 பேர் உயிரிழந்தனர். 1.67 லட்சம் பேர் காயமடைந்தனர். இதனால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து சேதமாகின.
மேலும், இந்த கட்ச் பகுதியானது நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ள இடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்காக விளையாடிய பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் ஓய்வு!