விஜய் நடித்து வரும் லியோ படக்குழு படப்பிடிப்பிற்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் படம்தான், லியோ. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்யுடன், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ் மற்றும் மன்சூர் அலிகான் போன்றோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் இணையத்தில் வைரலாகின. தற்போது, காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே, நேற்று காஷ்மீர், டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர்.
இதைத்தொடர்ந்து, நிலநடுக்கம் குறித்து லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சந்திரமுகி படத்தில் பங்களாவிற்குள் செல்லும் வடிவேலு பயந்து நடுங்கும் வீடியோவை பகிர்ந்து ‘நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் நண்பா’ என்று பதிவிட்டது இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், லியோ படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. டாக்குமன்ட்ரி வடிவில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில் படப்பிடிப்பிற்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேக் அப்பா? ஃபில் பண்ணாதீங்க – அரசின் புதிய முன்னெடுப்பு..