கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின்போது ஓட்டலில் தோசை சுட்ட ப்ரியங்கா காந்தி, அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வருகிற 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13 தொடங்கி 20 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்து 102 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கி கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் பொதுச்செயலாளரான ப்ரியங்கா காந்தி, கர்நாடக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரத்தில் கலந்து கொள்ள அம்மாநிலத்துக்கு வந்துள்ளார்.
இந்தச் சுற்றுப்பயணத்தின்போது, மைசூருவில் உள்ள தனியார் ஓட்டலில் ப்ரியங்கா காந்தி, காலை உணவாக இட்லி மற்றும் தோசை சாப்பிட்டதாகவும் அது நன்றாக இருந்ததாகவும், அவர் தோசை சுடுவது எப்படி எனக் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ப்ரியங்கா காந்தி தோசை சுடும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Priyanka Gandhi enjoying making dosa at Mysuru’s Mylari restaurant#KarnatakaElection2023 pic.twitter.com/hH6vCjXsQY
— Mamta Gusain (@Mamtagusain5) April 26, 2023
மோதலில் சிவகார்த்திகேயன் மற்றும் ரஜினிகாந்த் ; வெளிவந்த தகவல்..