பெரியாண்டவர் வீர சிலம்பாட்டம் மற்றும் நாடக கலைக்குழு நிறுவனர் கோபாலுசாமி எழுதிய “கால் மானங்கள்” உயிரின் மதிப்பீடு என்ற சிலம்பம் வீர விளையாட்டுக்கான நூலை முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் வெளியீட்டார்.
சிலம்பகுரு ரத்தினவேல் ஐயா ஆசிர்வாதத்துடன் பெரியாண்டவர் வீர சிலம்பாட்டம் மற்றும் நாடக கலைக்குழு நிறுவனர் கோபாலுசாமி எழுதிய “கால் மானங்கள்” உயிரின் மதிப்பீடு என்ற சிலம்பம் வீர விளையாட்டுக்கான நூல் வெளியீட்டு விழா புதுவை தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு முருகவேல் வரவேற்புரை நிகழ்த்தினார். கோபாலசாமி ஏற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அரசு கொறடா ஆனந்தராமன் கலந்து கொண்டு “கால் மானங்கள்” என்ற நூலினை வெளியிட அதனை சமூக ஆர் வலர் நடராஜன், மணவெளி தொகுதி திமுக பொறுப்பாளர் சன் சண்முகம், மலர்க்கம்பம் சத்திரிய அகாடமி கணேஷ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதில் ஆதவன் மற்றும் பெரியாண்டவர் வீரசிலம்பாட்டம் மற்றும் நாடகக் கலைக்குழு ஜவகர், மனோ, தமிழாசிரியை மகேஸ்வரி உட்பட ஏராளமான பெரியாண்டவர் வீர சிலம்பாட்டம் மற்றும் நாடகக் கரைக்குழு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த சிலம்பாட்ட குழு வீராங்கனைகளுக்கு மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஷவர்மா சாப்பிட்டதால் நேர்ந்த சோதனை; ரூ.70,000 செலவானது – பிரபல இயக்குநர் பதிவு