Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை; கொதிக்கும் காங்கிரஸ்!

    ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை; கொதிக்கும் காங்கிரஸ்!

    ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து  மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

    கடந்த 2019-ஆம் ஆண்டு  மோடி பெயரை அவரின் சமூகம் சார்ந்து பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

    இந்த தீர்ப்பால், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று, சென்னை வருவதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது இந்த செய்தியை அறிந்து உடனடியாக ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டார். 

    இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும், ஜனாதிபதியை மூத்த தலைவர்களுடன் சென்று சந்திக்கவும் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    அஜித்குமாரின் தந்தை மறைவு; இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....