Monday, March 18, 2024
மேலும்
    Homeஆன்மிகம்மகாபாரதம் நடந்தது உண்மைதானா? இதோ விளக்கங்கள்!

    மகாபாரதம் நடந்தது உண்மைதானா? இதோ விளக்கங்கள்!

    மகாபாரதம் என்பது பண்டைய இந்தியாவின் பழம்பெரும் காவியம் ஆகும். கிமு 9 ஆம் நூற்றாண்டில் குருக்ஷேத்திர இராச்சியத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான வம்சப் போராட்டம் மற்றும் உள்நாட்டுப் போரைப் பற்றிய ஒரு சமஸ்கிருத காவியம் ஆகும்.

    மேலும் பகவத்-கீதையின் உரை, ஏராளமான துணைப்பிரிவுகள், இறையியல் சம்மந்தப்பட்ட ஒழுக்கநெறிகள் மற்றும் தத்துவ சொற்பொழிவுகள் ஆகியவை இதில் அடங்கும்.

    மகாபாரதம் இந்து மதத்தின் வளர்ச்சியைப் பற்றி கூறும் முக்கியமான ஆதாரமாகும்.

    மேலும் மகாபாரதம் என்பது இந்துக்களின் தர்மம் (இந்து தார்மீக சட்டம்) மற்றும் ஒரு வரலாறு (இதிஹாசா, அதாவது “அதுதான் நடந்தது”) பற்றிய ஒரு உரையாக இந்துக்களால் இன்றுவரை கருதப்படுகிறது.

    உண்மையில் மகாபாரத போர் நடந்ததா? 

    அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் யாரையும் நாம் முன்னோர்கள் கூட பார்த்தது இல்லை. சிந்து சமவெளி நாகரிகம் வந்து கொண்டிருந்த காலம் மற்றும் சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மகாபாரதம் / ஆரிய சாகா நடந்தது என்று கூறப்படுகிறது.

    கிமு 3000 இல் மகாபாரதம் நடந்தது என்று கூறுவதற்கும் நம்மிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. ஆனால் இதுவரை சொல்லப்படாத மிகவும் நம்பமுடியாத கதைக்கு ஒரு சொல் இருந்தால் – அது மகாபாரத கதை தான்.

    மகாபாரத கதையில் கூறப்படும் வரலாற்றுக்கு உண்மை ஏதேனும் உள்ளதா என்பது பற்றி ஒரு பெரிய விவாதம் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.

    இந்த கதை மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது, இது ஏராளமான மக்களை ஊகிக்க வைத்தது – ‘இது உண்மையில் நடந்ததா? வாருங்கள் இதற்க்கான சில பதில்களைக் கண்டுபிடிப்போம்.

    1.மொழியை டிகோடிங் (Decoding) செய்தல்:

    மகாபாரதம் ஒரு “இதிஹாஸ்” என்று அவ்வப்போது காவியத்தில் எழுதப்பட்டுள்ளது, இதிஹாஸ் என்பதன் பொருள் “இவ்வாறு நிகழ்ந்தது” என்பதாகும்.

    “புரான்” மற்றும் “இதிஹாஸ்” என்ற சொற்கள் பண்டைய மக்களால் “பண்டைய” மற்றும் “சமீபத்திய” நிகழ்வுகளை வகைப்படுத்த குறிப்பாக உருவாக்கப்பட்டன.

    இரண்டு சொற்களும் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்த வரலாற்றைக் குறிக்கின்றன. எழுத்தாளரின் நோக்கங்கள் ஒரு கவிதை அல்லது புனைகதை படைப்பு என்றால், அவர்கள் அதை “மகாகவ்யா” அல்லது “கதா” என்று தான் கூறியிருப்பார்.

    2.பாரத்-வம்சத்தின் பதிவுகள்: 

    ஆதிபர்வா என்னும் நூலில், அத்தியாயம் 62 இல் பாரத-வம்சத்தின் வரலாறுகள் மகாபாரதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆதி பர்வா அல்லது தொடக்க புத்தகம் என்பது மகாபாரதத்தின் பதினெட்டு புத்தகங்களில் முதலாவதாகும்.

    “ஆதி” என்பது “முதலில்” என்று பொருள்படும் ஒரு சமஸ்கிருத சொல். ஆதி பர்வா பாரம்பரியமாக 19 துணை புத்தகங்களையும் 236 அத்தியாயங்களையும் கொண்டுள்ளது. ஆதி பர்வாவின் விமர்சன பதிப்பில் 19 துணை புத்தகங்களும் 225 அத்தியாயங்களும் உள்ளன.

    ராஜாக்களின் நீண்ட பரம்பரையுடன் தொடர்புடைய பல வம்சங்கள் (50 க்கும் மேற்பட்டவர்கள்) பற்றி இப்படைப்பில் கூறப்பட்டுள்ளன.

    ஒருவேளை, இது வெறும் புனைகதையாக இருந்து இருந்தால், இந்த கதையை உருவாக்க 4-5 மன்னர்கள் போதுமானதாக இருந்திருப்பார்கள். 50 க்கும் மேற்பட்டவர்கள் பற்றி எழுத வேண்டிய அவசியம் இருந்து இருக்காது.

    3.கலியுக விவரங்கள்:

    மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ள கலியுக விளக்கத்தைப் படியுங்கள். அதில் கிருஷ்ணா பகவான் கூறிய அனைத்து போதனைகளும், இன்றைய நவீன வாழ்க்கையில் நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் ஆகும்.

    ஆனால், நினைவில் கொள்ளுங்கள்., இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு கற்பனை கதை. ஆனால் எப்படி? ஒரு கற்பனை கதையில் இன்றைய கால கட்டத்திற்கு தேவையான அனைத்து ஒழுக்க நெறிமுறைகளும் கூறப்பட்டிருக்கும். சிந்தியுங்கள்!

    4.துவாரகா நகரம்:

    பண்டைய துறைமுக நகரமான குஜராத்தில் உள்ள துவாரகா நகரம், பகவான் கிருஷ்ணர் அவர்கள் வாழ்ந்த நகரமாக கருதப்படுகிறது. கிருஷ்ணர் இறந்த பிறகு, இந்த நகரம் வெள்ளத்தால் கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

    பல வருட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, 100 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு நகரம் இருந்ததாக தொல்பொருள் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், வேதங்களில் கூறப்பட்டு உள்ள அறிக்கைகளுக்கு ஆதரவாக சில ஆதாரங்களை தொல்பொருள் ஆராயச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

    மகாபாரதம் மற்றும் பிற வேத இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி, பிரம்மாண்டமான துறைமுக நகரமாக துவாரகா நகரம் இருந்ததாகவும், பிரம்மாண்டமான கோட்டைச் சுவர்கள், கப்பல்கள், மற்றும் கப்பலை பாதுகாக்கும் சட்டகம் ஆகியவை முழு நீரில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நகரம் கடல் நீரில் மூழ்கியது உண்மைதான் என்று தொல்பொருள் ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    5. துவாரகா நகரின் துரதிர்ஷ்டவசமான விதி:

    மகாபாரதத்தின் 7 வது அத்தியாயத்தில் 40 வது வசனத்தில் துவாரகா நகரம் கடலில் காணாமல் போனதை பற்றி விவரிக்கிறது. “மக்கள் அனைவரும் புறப்பட்டபின்னர், கடல் நீர் முழுவதும் துவாரகா நகரை வெள்ளத்தில் மூழ்கடித்தது, அப்பொழுதும் கூட துவாரகா நகரம் எல்லா வகையான செல்வங்களையும் கொண்டிருந்தது. நிலத்தின் எந்தப் பகுதியை நீர் கடந்து சென்றாலும், அந்த இடம் உடனடியாக கடல் நீரில் மூழ்கியது.”

    6. மகாபாரதத்தில் விவரிக்கப்பட்ட பண்டைய நகரங்கள்:

    வட இந்தியாவில் முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட தளங்கள் உண்மையானவை என்று தொல்பொருள் சான்றுகளை ஆராய்ச்சியாளர்கள் வழங்கியுள்ளன, அவை மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ள பண்டைய நகரங்களை நமக்கு அடையாளம் காட்டுகின்றன.

    செப்பு பாத்திரங்கள், இரும்பு, முத்திரைகள், தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், டெரகோட்டா டிஸ்க்குகள் மற்றும் வர்ணம் பூசப்பட்ட சாம்பல் பொருட்கள் மட்பாண்டங்கள் அனைத்தும் இந்த தளங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    இந்த கலைப்பொருட்கள் பண்டைய இந்தியாவின் ஆரிய-படையெடுப்பு அல்லாத மாதிரியுடன் ஒத்திருக்கிறது. இவற்றில் எந்த ஒரு விஞ்ஞான சாயலும் இல்லை.

    7. ராமாயணத்திற்கும் மகாபாரதத்திற்கும் உள்ள ஒற்றுமை:

    ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கூறப்பட்ட வம்சங்கள் வேறுபாடு இல்லாமல் ஒத்துப்போகின்றன.

    இவை இரண்டுமேயெ மிக பெரிய “காவியங்கள்”. இவை இரண்டிலும் வெவ்வேறு மன்னர்களுக்கும் அவர்களின் வம்சங்களுக்கும் இடையில் கூறப்பட்ட உறவுகள் கூட ஒருவருக்கொருவர் பொருந்துகின்றன.

    இரண்டுமே இரண்டு வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டது. அதிலும் முற்றிலும் வேறுபட்ட இருவரால் எழுதப்பட்ட “காவியங்கள்” என்றால், எப்படி ஒரு சிறு விவரம் கூட மாற்றம் இல்லாமல் ஒத்துபோகிறது?

    மகாபாரதம் ராமாயணத்தை விட பிற்காலத்தில் எழுதப்பட்டு உள்ளது. அப்படி இருக்கும் போது மகாபாரதத்தின் ஆசிரியர் ஏன் இராமாயணத்தை இயற்றிய ஆசிரியரின் அதே கருத்துகளையும் பாத்திரங்களையும் கடன் வாங்கினார்? என்ற கேள்வி நம்மில் கண்டிப்பாக எழும்.

    8. ஸ்ரீ கிருஷ்ணரின் பரம்பரை

    கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தீனஸ் கூற்று படி, சந்திரகுப்த மௌரிய மன்னர் ஸ்ரீ கிருஷ்ணரின் பரம்பரையை சேர்ந்த 138 வது மன்னர் என்று குறிப்பிடுகிறார்.

    இதன் பொருள் என்னவென்றால், ஸ்ரீ கிருஷ்ணர் கடந்த காலத்தில் வாழ்ந்ததாகவும், மகாபாரதம் உண்மையில் நிகழ்ந்தது என்றும் அர்த்தப்படுகிறது.

    9. மகாபாரதத்தில் கூறப்பட்டு உள்ள தற்போதைய நகரங்கள்:

    மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இடங்களும் உண்மையானவை, அவை அனைத்தும் உண்மையான இடங்களாக நமக்கு அடையாளம் காட்டப்படுகின்றன.

    உதாரணமாக, ஹஸ்தினாபூர் தான் இன்றைய உத்திரப்பிரேதசம் மற்றும் இந்திரபிரஸ்தா நகரம் இன்றைய டெல்லி ஆகும். குஜராத் கடற்கரையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகா அமைந்துள்ளது.

    மேலும், மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ள நகரங்கள் அனைத்தும் இன்றைய இந்தியா நகரங்களுடன் மட்டும் முடிந்து விடவில்லை, ஏனெனில் மகாபாரதத்தில் இந்தியா துணைக் கண்டத்தை பாரதம் என்று அழைத்து உள்ளனர்.

    எடுத்துக்காட்டுக்கு, அன்றைய காந்தர் நகரம் இன்றைய காந்தராக அழைக்கப்படலாம்.

    10. மகாபாரதத்தில் கூறப்பட்டு உள்ள வானியல் குறிப்புகள்:

    மகாபாரதத்தின் (Udyoga Parva) உட்யோக அத்தியாயத்தின் கூற்று படி, மகாபாரத போருக்கு சற்று முன்பு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கார்த்திகை மாதத்தில் ஹஸ்தினாபூர் சென்றார் என்றும், அன்று சந்திரன் ரேவதி நட்சத்திரத்தில் இருந்ததாக கூறப்பட்டு உள்ளது.

    அதே போன்று, ஹஸ்தினாபுரத்திற்கு செல்லும் வழியில், கிருஷ்ணர் பிரிகஸ்தலா என்ற இடத்தில் ஒரு நாள் ஓய்வெடுத்தார் என்றும், அந்த நாளில் சந்திரன் பரணி நட்சத்திரத்தில் அமைந்து இருந்ததாக கூறப்படுகிறது.

    அடுத்ததாக, துரியோதனன் கிருஷ்ணரின் அனைத்து முயற்சிகளையும் நிராகரித்து போரை தவிர்க்க முடியாததாக மாற்றிய நாள் அன்று புஷ்யா என்ற நட்சத்திரத்தில் சந்திரன் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த வானியல் குறிப்புகள் அனைத்தும் மகாபாரதம் உண்மையாக நடந்தது என்பதற்கு சான்றாக விளங்குகிறது.

    11. பாரத் வர்ஷ் (Bharat Varsh):

    பாரத் மன்னர் (துஷ்யந்த் & சகுந்தலாவின் மகன்) நாட்டிற்கு பாரத் என்று பெயர். ஒரு நாவலின் ஹீரோவின் பெயரை, அவரது நாட்டுடன் சேர்த்து பெயரிடப்படும்!

    பிரம்ம வேத விளக்கத்தின்படி, பூமி கிரகம் முழுவதும் பரத்வர்ஷ் என்று அழைக்கப்படுகிறது, ஆனால் குறிப்பாக இமயமலைக்கு தெற்கே அமைந்துள்ள கண்டம் பராத் பரத்வர்ஷ் என்று அழைக்கப்படுகிறது.

    மேலும், இது ஆர்யாவார்ட் என்றும் அழைக்கப்படுகிறது.

    12. ஆரிய கோட்பாட்டில் உள்ள தவறு:

    ஐரோப்பிய அறிஞர்கள், நாடோடிகளாக இருந்த ஆரிய பழங்குடியினரை கிமு 1500 க்குப் பிறகு இந்தியாவுக்கு அழைத்து வந்தனர்.

    அப்படி இருக்கையில், கி.மு 700 க்கு முன்னர் இந்த ஆரியர்கள் எவ்வாறு சமஸ்கிருத மொழியை உருவாக்கி, இந்த அளவிற்கு அறிவாளிகளாக இருந்து இருக்க முடியும்?

    இதனால், சிறந்த இந்திய சிந்தனையாளர்களான லோக்மண்ய திலக், ஸ்ரீ ஆர்பிண்டோ, மற்றும் டயானந்த் சரஸ்வதி உள்ளிட்டோர் ஐரோப்பிய கோட்பாட்டை நிராகரித்தனர்.

    13. மகாபாரதம் வசனங்களில் எழுதப்பட்டுள்ளது:

    மகாபாரதம் கற்பனை கதை என்று கூறுவது நகைப்புக்குரியது, ஏனெனில் இந்த நூல்கள் கவிதை நடையில் எழுதப்பட்டு உள்ளன. எல்லாவற்றையும் விட கணித சூத்திரங்கள் கூட மகாபாரதத்தில் கவிதை வடிவத்தில் எழுதுவது வழக்கமாக்க பட்டுள்ளது.

    14. பதிவு செய்யப்படாத வரலாற்று குறிப்புக்கள்:

    மௌரிய, குப்தா மற்றும் இந்தோ-கிரேக்க வம்சங்களை பற்றியும் நமது புராணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த வம்சங்கள் அனைத்தும் கிரேக்க வரலாற்றாசிரியர்களால் பதிவு செய்யப்பட்டதால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

    இவர்களது வம்சங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்று கிரேக்க வரலாற்றாசிரியர்களுக்கு எப்படி தெரியும்? நாம் ஒரு சில வரலாற்று குறிப்புகளை சரியாக பதிவு செய்யவில்லை என்பதே உண்மை.

    15. ஓப்பன்ஹைமரை (Oppenheimer) நம்பிக்கை:

    மன்ஹாட்டன் திட்டத்தின் பொறுப்பில் இருந்த நவீன அணுகுண்டு முதன் முதலாக வெடித்த பின்னர், ஒரு மாணவன் கட்டிடக் கலைஞர் ஓப்பன்ஹைமமரிடம் “பூமியில் முதல் அணுகுண்டை வெடித்த பிறகு நீங்கள் எப்படி உணருகிறீர்கள்” என்று கேள்வி கேட்டான்.

    அதற்கு ஓப்பன்ஹைமர் “கண்டிப்பாக இது முதல் அணுகுண்டாக இருக்காது, வேண்டுமானால், நவீன காலத்தில் பயன்படுத்த பட்ட முதல் அணுகுண்டு என்று கூறலாம்”. என்று கூறினார்.

    இந்த பதிலின் மூலம் பண்டைய இந்தியாவில் அணுக்கள் பயன்படுத்தப்பட்டன என்று ஓப்பன்ஹைமர் அவர்கள் உறுதியாக நம்பினார் என்று தெரிகிறது.

    16. பதிலளிக்கப்படாத சில கேள்விகள்:

    ஓப்பன்ஹைமர் அவர்களை நம்ப வைத்தது எது? நவீன அணு ஆயுதங்களுடன் பொருந்தக்கூடிய வகையில் மகாபாரதப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் விளக்கங்கள் துல்லியமாக நமக்கு கிடைத்து உள்ளன.

    இக்காவியத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் எவ்வாறு நவீன அணு ஆயுதங்களின் ஆற்றலுடன் பொருந்தக்கூடும்?

    குருக்ஷேத்திர போரின், ஒரு பகுதியில் அதிக அளவில் (radio activity) வானொலி செயல்பாட்டைக் உபயோகித்தார்கள் என்று கூறும் கதைகளில் எவ்வளவு உண்மை இருக்கிறது? என்றும் நமக்கு தெரிய வில்லை.

    17.கிரிகோரியன் நாட்காட்டி (The Gregorian Calendar):

    குருக்ஷேத்ரா யுத்தம் நடந்திருக்க வேண்டும் என்று கிரிகோரியன் நாட்காட்டி உறுதி அளிக்கிறது என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை, ஆனால் இது மிகவும் சுவாரஸ்யமானதும் கூட.

    நாள்காட்டி படி, இந்த நிகழ்வு கிமு 3102 பிப்ரவரி 18 அன்று அதிகாலை 2:27:30 மணிக்கு நிகழ்ந்தது. கிழக்கு மற்றும் மேற்கத்திய கலாச்சாரம் இரண்டும் இந்த தேதியையும் நேரத்தையும் கலியுகத்தின் தொடக்கமாகவும், கிருஷ்ணர் அவர்களின் மரணமாகவும் ஏற்றுக்கொண்டனர்.

    18. நீருக்கடியில் கிடைத்த கண்டுபிடிப்புகள்:

    ஆழமான நீருக்கடியில் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

    அவற்றில் சில:

    பிரம்மாண்டமான துவாரகா நகர சுவர், ஒரு பெரிய கதவு சாக்கெட் (socket) மற்றும் கோட்டை சுவர்கள், இயற்கை துறைமுகம், வெவ்வேறு அகலங்கள் மற்றும் அளவுகள் கொண்ட இரண்டு பாறை வெட்டப்பட்ட ஸ்லிப்வேக்கள் (rock-cut slipways) கடற்கரையிலிருந்து இடைநிலை மண்டலம் மற்றும் பல பழைய கல் கப்பல் நங்கூரங்கள் கிடைத்து உள்ளன.

    அகழ்வாராய்ச்சியில் கடல்-சங்கு ஓடு மீது மூன்று தலை கொண்ட (three-headed motif on a sea-conch shell) உருவம் கண்டுபிடிக்கப்பட்டது. இது நமக்கு கலையின் முக்கிய கருத்தை உணர்த்தும். மேலும் இது போன்ற கலை நயம் மிக்க அம்சம் வேதத்திலும் கூறிப்பிடப்பட்டுள்ளது.

    ஹரிவம்சா (Harivamsa) துவாரகா நகரம் இருந்ததற்கான மேலும் ஒரு சான்று ஆகும். மற்றும் குருக்ஷேத்ரா போருடன் இது நேரடி தொடர்பு உடையது.

    19. கிரக நிலைகளின் சரியான கதை:

    கிருஷ்ணர் கர்ணனுடன் ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறினார். அந்த சமயம், சந்திரன் இன்னும் உத்திர ஃபல்குனி என்ற நட்சத்திரத்தை அடையவில்லை.

    கர்ணன் அவருடன் சிறிது தூரம் சென்றான். பின்னர் அவர் வானத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை கிருஷ்ணருக்கு விவரித்தார்.

    அத்தகைய கிரக உள்ளமைவு மிகவும் மோசமான சகுனத்தைக் குறிக்கிறது என்று அவர் தனது அச்சத்தை வெளிப்படுத்தினார். இத்தகைய சகுனத்தை பெரிய அளவிலான உயிர் இழப்பு மற்றும் இரத்தத்தை நனைப்பது போன்றவற்றுடன் ஒப்பிட்டார்.

    வியாசர் இந்த கிரக நிலைகள் அனைத்தையும் பதினாறு வசனங்களில் விவரித்து உள்ளார். மற்றும், யாரோ ஒருவர் இவற்றை வானத்தில் காட்சிப்படுத்திய பின்னர் அதை இவர் விவரித்தார் என்றும் கூறப்படுகிறது.

    20.பறக்கும் விமானம் மற்றும் அணுசக்தி போர்:

    இந்திய காவியங்கள், குறிப்பாக மகாபாரதம், பேரழிவு மற்றும் அழிவின் கதையை நமக்கு தெளிவாக உரைக்கின்றன.

    ஆனால், ஜப்பானில் முதல் அணுகுண்டுகளை வீசும் வரை காவியங்களில் கூறியுள்ள அழிவுகளை பற்றி சமஸ்கிருத அறிஞர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    மகாபாரதத்தில் கூறப்பட்டு உள்ள உண்மையான வசனங்கள்:

    “கூர்க்கா, என்பது விரைவான மற்றும் சக்திவாய்ந்த விமானம் (வேகமான விமானம்) பறக்க, பிரபஞ்சத்தின் (அணுசக்தி சாதனம்) சக்தி கொண்ட ஒரு எறிபொருளை (ராக்கெட்) வீசியது என்பதாகும். இதனை பார்ப்பதற்கு ஒரு ஒளிரும் பத்தாயிரம் சூரியன்களைப் போல பிரகாசமான புகை மற்றும் சுடர் நெடுவரிசை,அதன் அனைத்து மகிமையுடனும் உயர்ந்து காட்சியளிக்கும்.

    இந்த வசனங்கள் பறக்கும் விமானம் மற்றும் அணுசக்தி சாதனம் போன்றவற்றுடன் ஒப்பிடப்படும் கருவிகள் மகாபாரத போரில் உபயோக படுத்தப்பட்டதற்கு சான்று ஆகும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....