Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபும்ராவுக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ள வீரர் - வெளிவந்த தகவல்..

    பும்ராவுக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ள வீரர் – வெளிவந்த தகவல்..

    மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர், பும்ரா. 29 வயதாகும் இவர் இதுவரையில் இந்தியாவுக்காக 30 டெஸ்டுகள், 72 ஒருநாள், 60 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

    முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் பும்ரா இடம்பெறவில்லை. இதன்பிறகு, பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சையும் பயிற்சியும் பெற்று வந்த பும்ரா, முழு உடற்தகுதியை அடைந்துள்ளதாக கூறப்பட்டது. 

    இதனால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டார். பின்னர் உடல்நிலை முழுத் தகுதியை அடையவில்லை எனக்கூறி இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் பும்ரா சேர்க்கப்படவில்லை. 

    இந்நிலையில், இன்று தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரிலும் பும்ரா பங்கேற்க மாட்டார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் பும்ரா விளையாடும் மும்பை அணிக்கு இது பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், பும்ராவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    மும்பை அணி வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதி பெங்களூர் அணியை எதிர்கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஐபிஎல் துவக்க விழா; நடனமாட தயாராகும் தென்னிந்திய நடிகைகள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....