ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உடல்நிலை சீராக உள்ளது. இதயம் செயலிழப்பு மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்து வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, கடந்த மார்ச் 10-ம் தேதி சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு கட்சி மற்றும் நலத் திட்ட பணிகளில் ஈடுபட்டு வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் தெரிவித்தனர். அதோடு இதயம் மற்றும் நுரையீரல் தொற்றில் பாதிக்கப்பட்டதாவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் கடந்த 26-ஆம் தேதி அவருக்கு தீவிர முச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உடல்நிலை சீராக உள்ளது. இதயம் செயலிழப்பு மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்து வருகிறார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தியதாக மூன்று ஆண்டுகள் நடந்த விசாரணையில் வழங்கப்பட்ட தீர்ப்பு..