Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇரயிலில் பயணம் செய்வோருக்கு இதமான செய்தி சொன்ன இரயில்வே நிர்வாகம் ; மகிழ்ச்சியில் பயணிகள்

    இரயிலில் பயணம் செய்வோருக்கு இதமான செய்தி சொன்ன இரயில்வே நிர்வாகம் ; மகிழ்ச்சியில் பயணிகள்

    கொரோனா வந்த பிறகு முற்றிலுமாய் பாதித்த நம்மின் இயல்பு வாழ்க்கை தற்போது பல போராட்டங்களுக்கு பிறகு ஓரளவு இயல்பு வாழ்க்கைப் பக்கம் திரும்பியுள்ளது. முற்றிலுமாய் கொரோனா ஓய்ந்துவிடவில்லை என்றாலும் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் மக்கள் தங்களின் அன்றாட வாழ்வை இயல்பாய் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பல இடங்களில் இன்னும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

    corona

    ரயில்வே நிர்வாகங்கள் கொரோனா தொற்று சார்ந்த பல கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்தன. இப்போதோ அவற்றில் பல கட்டுப்பாடுகளும் கொரோனா தொற்று குறைந்தமையால் தளர்த்தப்பட்டு விட்டன. அப்படியாக தற்போது கட்டுப்பாடு ஒன்று தளர்த்தப்பட்டுள்ளது. bedsheet

    கொரோனா தொற்றின் காரணமாய் கடந்த 2020 மார்ச் 15-ஆம் தேதி முதல் ரயில்களில் போர்வைகள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இடையினில் கொரோனா தொற்று குறைந்த சமயத்தில் இரயிலில் பயணப்பட்ட மக்கள் கேட்டும் கூட போர்வைகள் வழங்கப்படமாட்டாது என்றே இரயில்வே நிர்வாகம் அறிவித்தது. தற்போதோ கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் மீண்டும் ரயில்களில் போர்வைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    train bedsheet bundle

    ரயில்வே நிர்வாகம், குளிர்சாதன ரயில்பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு போர்வை வழங்குதல் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் இனி குளிர்சாதன ரயில்பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு போர்வைகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....