Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை..

    இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை..

    சத்னம் சிங் என்ற பெயருடைய இந்திய வம்சாவளியினைச் சேர்ந்த நபர் அமெரிக்காவில் தனது காரில் உட்கார்ந்திருந்த போது அடையாளம் தெரியாத நம்பர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவருக்கு வயது 31.

    தனது நண்பரிடமிருந்து வாங்கிய காரில் சத்னம் சிங், தனது வீட்டிற்கு அருகில் நிறுத்திவிட்டு அதனுள் அமர்ந்திருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    மேரிலேண்ட்டில் வசித்து வந்த மற்றொரு இந்தியர் சில நாட்களுக்கு முன்னால் இதே முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். தற்போது மற்றொரு இந்தியர் நியூயார்க்கில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    சனிக்கிழமை மதியம் நடைபெற்ற இந்த சம்பவத்திற்குப் பிறகு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சத்னம் சிங்கினைக் கொண்டுசென்றுள்ளனர். எனினும் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    இந்த சம்பவமானது ரிச்மன்ட் ஹில்லிற்கு அருகில் உள்ள ஓசோன் பார்க்கில் நடைபெற்றுள்ளது. இந்த இடத்தில் இதற்கு முன்னர் இரண்டு இந்தியர்கள் ஏப்ரல் மாதத்தில் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    காரில் உட்கார்ந்திருந்த சத்னம் சங்கினை நோக்கி கொலைகாரர்கள் நடந்து சென்றுள்ளனர் என்று காவல்துறை கூறியுள்ளது. ஆனால் அருகிலிருந்த வீட்டுக்காரர் கொலைகாரர்கள் ஒரு காரில் வந்து சுட்டுவிட்டுப்போனதாய் கூறியுள்ளார்.

    ‘சத்னம் சிங் தனது காரில் இருந்த போது மற்றொரு காரானது அவரை நோக்கி வந்தது. அதன் பிறகு அந்த காரில் இருந்தவர்கள் சத்னம் சங்கினைச் சுட்டனர்.’ என்று அருகிலிருந்த வீட்டுக்காரரான ஜோன் கூறியுள்ளார். மேலும், அவரது சிசிடிவி கேமிராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்திருந்தாலும், இன்று வரை கொலைக்கான காரணம் தெரியாததால் காவல் துறையினர் யாரையும் கைது செய்யவில்லை. காரினைக் கடன் கொடுத்த நபருக்கு இந்த கொலைக்குப் பின்னால் ஏதேனும் தொடர்பு இருக்கலாம் அல்லது காரின் உரிமையாளரைக் கொல்வதற்கான திட்டமாகவும் இது இருந்திருக்கலாம் என்பது போன்ற கோணங்களிலும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    இதற்கு முன்னாள் தெலங்கானாவினைச் சேர்ந்த சாய் சரண் என்னும் நபர் தனது காரினுள் சுடப்பட்டுக் கிடந்தது குறிப்பிடத்தக்கது. 25 வயதாகிய சாய் சரண், மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பொழுது ஜூன் 19ம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    ஏவுகணைக்கு அருகில் நின்று முகச்சவரம் செய்த உக்ரைன் குடிமகன்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....