Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதொடர் தோல்வியில் பி.வி.சிந்து; சோகத்தில் ரசிகர்கள்

    தொடர் தோல்வியில் பி.வி.சிந்து; சோகத்தில் ரசிகர்கள்

    இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினார்.

    தலைநகர் தில்லியில் இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து 14-21, 20-22 என்ற நேர் செட்டில் 30-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் சுபநிடா கேத்தோங்கிடம் தோல்வி அடைந்தார். இத்தோல்வியின் மூலம் பி.வி.சிந்து இத்தொடரிலிருந்து வெளியேறினார். இது பலரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னதாக, பி.வி.சிந்து இவர் காயம் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக எந்தவித சர்வதேச போட்டியிலும் களம் காணாமல் இருந்த நிலையில், சமீபத்தில் மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் பங்கேற்றார். இப்போட்டியில் முதல் சுற்றில் பி.வி.சிந்து கரோலினா மரின் என்ற ஸ்பெயின் வீராங்கனையை எதிர்கொண்டார். ஆனால், யாரும் எதிர்பாரா விதமாக சிந்து 12-21, 21-10, 15-21 என்ற கேம்களில் மரினிடம் தோல்வி கண்டார்.

    மலேசியா ஒபன் பாட்மிண்டன், இந்தியா ஒபன் பாட்மிண்டன் என தொடர் தோல்விகளை பி.வி.சிந்து சந்தித்து வருவது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், தில்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சகநாட்டைச் சேர்ந்த ஹெச்எஸ் பிரனாயை 21-14, 21-15 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் வசூல் நிலவரம் என்ன?

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....