Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்"நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்" - சு.வெங்கடேசன் அறிக்கை!

    “நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்” – சு.வெங்கடேசன் அறிக்கை!

    மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து PINK Book என்று சொல்லப்படும் இரயில்வே திட்ட புத்தகம் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் தமிழகத்திற்கான புதிய வழித்தடத்திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்புறக்கணிப்பை கண்டித்து மாநிலங்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.  

    அந்த அறிக்கையில், தமிழகத்துக்கான புதிய வழித்தடத் திட்டங்களான திண்டிவனம் -செஞ்சி- திருவண்ணாமலை; திண்டிவனம் -நகரி; அத்திப்பட்டு-புத்தூர்; ஈரோடு- பழனி ;சென்னை -கடலூர்; மதுரை- தூத்துக்குடி அருப்புக்கோட்டை வழியாக; ஸ்ரீபெரும்புதூர் -கூடுவாஞ்சேரி- இருங்காட்டுக்கோட்டை- ஆவடி; மொரப்பூர்- தர்மபுரி ஆகிய எட்டு புதிய வழித்தடத்திட்டங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையிலும் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கி்றேன் என தெரிவித்தவர், ராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய வழித்தடத்திட்டத்திற்கு 207 கோடி ரூபாய் தேவை. அதற்கு 59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.  

    train track project

    மேலும், ”காட்பாடி -விழுப்புரம் இரட்டை பாதை திட்டத்திற்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் -கரூர்- திண்டுக்கல் இரட்டை பாதை திட்டத்திற்கு 1,600 கோடி தேவை .ஆனால் வெறும் ஒன்றரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஈரோடு -கரூர் இரட்டை பாதை திட்டத்திற்கு 650 கோடி தேவை. ஒதுக்கப்பட்டுள்ளது வெறும் ஒரு கோடி ரூபாய். தொடர்ந்து மூன்றாவது பட்ஜெட்டாக இப்படி மிகக் குறைந்த தொகையை தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

    மதுரை- வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி இரட்டை பாதை திட்டமும் வாஞ்சி மணியாச்சி- நாகர்கோயில் இரட்டை பாதை திட்டமும் கன்னியாகுமரி- நாகர்கோயில் திருவனந்தபுரம் இரட்டை பாதை திட்டமும் தொடர்ந்து காலதாமதமானது. இது குறித்து பல முறை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். தொடர்ந்து கடந்த ஆண்டும் கடும் எதிர்வினையாற்றினோம். 

    venkatesan-su-mp

    அதன் தொடர்ச்சியாக இப்பொழுது மதுரை -வாஞ்சி மணியாச்சி -தூத்துக்குடி ரெட்டைபாதையில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாஞ்சி மணியாச்சி- நாகர்கோயில் திட்டத்திற்கு 1700 கோடி தேவை. இதுவரை 750 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 360 கோடியும் வரும் ஆண்டில் 425 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. திட்டம் விரைந்து முடிவடைய நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.  

    மதுரை போடியாகனூர் அகல ரயில் பாதை திட்டம் பத்தாண்டுகளுக்கும் மேலாக தாமதமாகிக்கொண்டிருக்கிறது. இது பற்றி பலமுறை முறையீடு செய்ததன் தொடர்சியாக நடப்பாண்டு(2021-22) 104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வரும் ஆண்டுக்கு 125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எங்களது தொடர்ந்த கோரிக்கைக்கு செவிமடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

    central

    திருவனந்தபுரம்- கன்னியாகுமரி இரட்டை பாதை திட்டத்திற்க்கு 900 கோடி முதலீடு செய்ய வேண்டும் இதுவரை 250 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு 700 கோடியும் அடுத்த ஆண்டுக்கு400 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த திட்டங்களை இரண்டு ஆண்டுகளில் முடிக்க ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். இந்தத் திட்டம் முடிவடைந்தால் சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கும் தூத்துக்குடிக்கும் ரெட்டைபாதை முடிவடைந்தது போக்குவரத்து இலகுவாகும்.  

    தமிழக புதிய வழித்தடத் திட்டங்களுக்கும் புதிதாக சேர்க்கப்பட்ட இரட்டை பாதை திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.” போன்றவை மாநிலங்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....