Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வாலி குறித்து வைரமுத்து போட்ட ட்விட்; நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

    வாலி குறித்து வைரமுத்து போட்ட ட்விட்; நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

    மறைந்த பிரபல பாடலாசிரியர் வாலி குறித்து பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது சினிமா ப்ரியர்களை நெகிழச் செய்து வருகிறது. 

    தமிழ்த் திரையுலகில் 15,0000-த்துக்கும் அதிகமான பாடல்களை எழுதியவர், கவிஞர் வாலி. இளமைக் கவிஞர் என பலராலும் பாரட்டப்பட்ட இவருக்கு பெரும் ரசிக கூட்டம் உள்ளது. தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்த வாலி கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18-ஆம் தேதி தனது 81-ஆவது வயதில் காலமானார். 

    கவிஞர் வாலி இருக்கும்போது, அவருக்கு இணையாக கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதி வந்தார். இருவருக்கிமிடையில் நேரடியாகவே ஆரோக்கியமான போட்டியிருந்தது. 

    இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாலி குறித்து பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில், “கமல் இருக்கும் வரை ரஜினிக்கும், ரஜினி இருக்கும் வரை கமலுக்கும், விஜய் இருக்கும் வரை அஜித்துக்கும், அஜித் இருக்கும் வரை விஜய்க்கும் ஒரு பிடிமானம் இருக்கும்.  எனக்கிருந்த பிடிமானத்தைப் பிய்த்துக்கொண்டு போய்விட்டீர்களே, வாலி அவர்களே! காற்றில் கத்தி சுற்றிக் கொண்டிருக்கிறேன்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கவிஞர் வைரமுத்துவின் இந்த பதிவை சினிமா ப்ரியர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

    சமரசத்தில் முடிந்த சிவகார்த்திகேயன் – ஞானவேல் ராஜா பிரச்சினை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....