Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமையல் குறிப்புமூன்று வெங்காயம் இருந்தால் போதும் டீக்கடை போண்டா தயார்!

    மூன்று வெங்காயம் இருந்தால் போதும் டீக்கடை போண்டா தயார்!

    டீக்கடையில் வெங்காய போண்டா மிகவும் சுவையாக இருக்கும். அவர்களுக்கு மட்டும் எப்படி அவ்வளவு சுவையாக வருகிறது என்ற கேள்விகள் உங்களுக்குள் இருந்திருக்கலாம். அதற்கான பதில்கள் இதோ,

    தேவையான பொருள்கள்: 

    • பெரிய வெங்காயம்- மூன்று 
    • பச்சை மிளகாய் – மூன்று 
    • மல்லித் தழை – ஒரு கொத்து 
    • கருவேப்பில்லை – ஒரு கொத்து 
    • கடலை மாவு – ஒரு கப் 
    • அரிசி மாவு – அரை கப் 
    • சிவப்பு மிளகாய்த் தூள் – அரைத் தேக்கரண்டி
    • சோம்பு- அரைத் தேக்கரண்டி 
    • இஞ்சி பூண்டு விழுது- ஒரு தேக்கரண்டி 
    • பெருங்காயம்- ஒரு சிட்டிகை
    • உப்பு, எண்ணெய், தண்ணீர்- தேவையான அளவு 

    செய்முறை:

    1. பிரியாணிக்கு நறுக்கியது போல் வாள் வாளாக வெங்காயங்களை வெட்டி ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்துடன் பச்சை மிளகாய் நீளமாக நறுக்கியதைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். 
    2. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மல்லித் தழை, கருவேப்பிலை, மிளகாய்த் தூள், உப்பு, சோம்பு, பெருங்காயம் போன்றவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
    3. பிறகு அதில் கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். வெங்காயத்தில் தண்ணீர் இருப்பதால் எண்ணெய்யும் தண்ணீரும் கொஞ்சமாக சேர்ப்பது நல்லது.  tea bonda
    4. எல்லாம் ஒட்டிய பிறகு, உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்ததும்,  சிறிது நேரம் அல்லது 15 – 20 நிமிடங்கள் கழித்து சூடான எண்ணெய்யில் உருண்டைகளாக உருட்டி பொறித்து எடுத்தால் சூடான டீக்கடை வெங்காய போண்டா தயார். 

    சத்து: வைட்டமின் சி, போலேட், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடம்புக்கு மிகவும் நல்லது.

    டீயும் வெங்காய போண்டாவும் நல்ல இணை தான்! உண்டுப் பாருங்கள் சுவை அள்ளும்!

    இதையும் செய்து பாருங்க:

    சுவையான கார சாரமான ஆட்டுக்கறி ஊறுகாய் தயார் செய்வது எப்படி?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....