முதல் அணு ஆயுத வடிவைப்பானது அமெரிக்காவைத் தான் சேரும். முதல் அணு ஆயுதமானது துப்பாக்கி பீப்பாய்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இதில் அதிகம் செறிவூட்டப்பட்ட இரண்டு நிறையுடன் யுரேனியத்தைக் கையாண்டுள்ளனர். இந்த அணு ஆயுத வடிவமைப்பில், குறுகிய துப்பாக்கி பீப்பாயில் ஒரு சாதாரண பீரங்கி உந்துவிசையை அமெரிக்கா பயன்படுத்தியது.
இரண்டாம் கட்ட அணு ஆயுதமாக பிளவு ஆயுத அணு வெடிப்பு வடிவமைப்பு. இது மிக சக்தி வாய்த்த ஆயுதமாகும் இதில், உயர் வெடிப்பொருள், பிளவுப் பொருளினை வேகமாக அழுத்த, மிக அதிக நிறையை இது அடையும். இது சாதாரண துப்பாக்கியை விடவும் மிக வேகமாக செயல்படக் கூடியது ஆகும்.
வெடிப்பு பொருள் கூட்டமைப்புக்கு ஒரு குறைவான பொருள் தேவைப்படுகிறது, இதற்குக் காரணம், முக்கியமான அடர்த்தி நேர்மாறாக மாறுபடும் என்பதால் தான்.
அணு வெடிப்புக்கு அதிவேகப் பிளவு சங்கிலியில் எதிர்வினைத் தேவைப்படுகிறது. இதனால் தான், நியூட்ரான் பிளவுகளை ஏற்படுத்துகிறது. இந்த எதிர்வினை ஆற்றலானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நியூட்ரான்களை விடுவிக்கிறது. இது பிளவின் போது ஒன்றிற்கும் மேற்பட்ட நியூட்ரான்கள் இணைந்து மற்றொரு பிளவை ஏற்படுத்துகின்றன. இந்தச் செயல் முறையில் பிளவு சங்கிலியானது மீண்டும் மீண்டும் நடந்துக் கொண்டே தான் இருக்கும்.
அணு ஆயுதங்களில் பிளவுப் படுத்தக் கூடிய முக்கிய பொருள்களாக யுரேனியம்-235 மற்றும் ப்ளூட்டோனியம்- 239 பயன்படுத்தப்படும். இதில் அதிவேகமாக பயணிக்கும் நியூட்ரான்கள் தான் பிளவுகளை ஏற்படுத்துகின்றன.
ப்ளூட்டோனியத்தை துப்பாக்கி வடிவைப்பு ஆயுதத்தில் பயன்படுத்த முடியாது, காரணம் இதன் கூறுகள் மெதுவாக நகர்த்தப்படுகிறது. ப்ளூட்டோனியம்- 239 உள்ளடக்கிய ஐசோடோப் ப்ளூட்டோனியம்- 240 ‘தன்னிச்சையாக பிளவு’ சிதைவுகளைக் கொண்டுள்ளது. மேலும் இது நியூட்ரான்களை ப்ளூட்டோனியத்தை எந்த நிறையிலும் தொடர்ந்து செல்லுத்தக் கூடிய ஆற்றலை உடையது.
1945 இரண்டாம் உலகப் போருக்கு அடுத்து அணு ஆயுதங்களுக்கு பிளவுப் படக் கூடிய விலையுர்ந்த பொருள்களின் அளவைக் குறைப்பதற்கும் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல வகையான புதுமைகள் புகுத்தப்பட்டன.