Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்ஆரோக்கியம்பீட்ருட்ட கிள்ளிப் பார்த்து வாங்கனும்; அப்போ தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய்லாம் எப்படி வாங்கனும்? படிங்க வாங்குங்க!

    பீட்ருட்ட கிள்ளிப் பார்த்து வாங்கனும்; அப்போ தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய்லாம் எப்படி வாங்கனும்? படிங்க வாங்குங்க!

    சமைத்த உணவு சுவையாக இருக்கவேண்டும் என்றால், வாங்கும் காய்கறிகள் நல்லதாக இருக்கவேண்டும். சிலருக்கு காய்கறிகளை எப்படிப் பார்த்து வாங்க வேண்டும் என்பது பிடிபடுவதில்லை. அன்றாட வாழ்வின் முக்கிய அங்கம் வகிப்பது காய்கறிகள்.

    அவை தரமானதாக வாங்குவது எப்படி? கண்பார்வையில் அல்லது தொட்டுப்பார்த்தாலே தரத்தை கண்டுபிடித்துவிடும் வகையில் எளிய முறையிலான யோசனைகளைப் பார்க்கலாம். அதற்கு முன் மிக முக்கியமானதொன்று விலை குறைவாக இருக்கிறதென்று வாடிய காய்கறிகளை வாங்காதீர்கள். வாங்கியவற்றை வாடவிடாமல் பிரஷ்சாக சமைக்க வேண்டும்.

    ஒவ்வொரு காய்கறியையும் எப்படி தரம் பார்த்து வாங்கவேண்டும் என்பதை இத்தொகுப்பில் காண்போம் வாருங்கள்.

    தக்காளி:

    தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்). நன்கு சிவப்பாக, பழுத்ததாக முழுமையாக கல் போரல இருக்க வேண்டும். உடனே சமைக்க வேண்டுமானால் சிவந்த, கனிந்த, கனத்த பழமாகப் பார்த்து வாங்க வேண்டும்.

    வெங்காயம்:

    வெங்காயம் பெரிதோ, சிறிதோ இரண்டையுமே எடுத்து நன்றாக அழுத்திப்பாருங்கள். ஈரம் இருக்கக்கூடாது. திண்ணமாகக் காய்ந்து இருக்க வேண்டும். வால் ரொம்ப நீளமாக இருக்கும் வெங்காயத்தையும் தவிர்த்து விடுங்கள்.

    பச்சை மிளகாய் :

    நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும். கரும்பச்சையாக இருந்தால் நன்கு முற்றியது. மெல்லியதாய் குச்சி போல் இருந்தால் ரொம்பப் பிஞ்சு. இரண்டிற்கும் நடுத்தரத்தில் இருந்தால் அதுதான் நல்ல பச்சைமிளகாய். காயும் காம்பும் பச்சையாக இருந்தால் ஃப்ரெஷாக இருக்கும்.

    பாகற்காய்:

    பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது. இதே போல் இஞ்சியை லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்.

    வெண்டை:

    அடர்ந்த பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். ரொம்பவும் நீளமாக இருக்கக் கூடாது. மேற்புறம் வரிவரியாக விடைத்து கட்டை போல் இருக்கக் கூடாது. நுணியை வளைத்தால் ஒடிய வேண்டும்.

    உருளை கிழங்கு:

    நல்ல கெட்டியாக இருக்க வேண்டும். பச்சை நிறம் வெளியில் தெரியக்கூடாது. கிழங்கில் இரு வகை உண்டு. வெளிறின தோல் கிழங்கு எனில், தோல் பளபளப்பாக இருக்க வேண்டும். அடர்ந்த பிரவுன் நிறத் தோல் கிழங்கு எனில், தோல் சொரசொரவென இருக்க வேண்டும். முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும் இதுதான் நல்ல உருளைக்கிழங்குக்கு அடையாளம். சுவையாகவும் இருக்கும். தழும்புகள், ஓட்டைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.

    காலிபிளவர்:

    பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும். மொட்டு மொட்டாக நெருக்கமாக இருப்பதை வாங்குங்கள். பூத்திருக்கக் கூடாது. கரும்புள்ளிகளும் தெரியக் கூடாது.

    குடை மிளகாய் :

    தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்

    கேரட்:

    கலர் வெளுத்து இருக்காமல் நல்ல சிவப்பாக இருக்க வேண்டும். வேர்க்கணு அதிகமாக வெளியில் தெரியாதவையாக இருக்க வேண்டும்.

    பீன்ஸ்:

    ஃப்ரெஷ் பீன்ஸ் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். உடைத்தால் பட்டென்று உடையும். அதுதான் சமையலுக்குச் சுவையாக இருக்கும். வெளிர்பச்சை நிறத்தில் இருந்தால் அது முற்றிய பீன்ஸ். வில் மாதிரி நன்றாக வளைவதை வாங்குங்கள். அதுவே நல்ல பீன்ஸ்.

    முட்டைக்கோஸ்:

    இதழ்கள் நெருக்கமாக கனமாக இருக்க வேண்டும். ஏற்கனவே வெட்டி வைத்திருக்கும் கோஸைவிட முழுசாக வாங்குவது நல்லது.

    வாழைக்காய் மற்றும் வாழைப்பூ:

    திண்ணமாக விடைத்து, தோல் நன்கு பரந்து ஒட்டி இருந்தால் அதுதான் நல்ல வாழைக்காய். காம்பில் பால் காயாமல் பிசுக்கென்று இருந்தால் ரொம்ப பிரஷ். முதல் இதழை நீக்கிப் பார்த்தால், பூ உள்ளே கறுப்பாகத் தெரிய்தால் அது பழைய வாழைப்பூ

    அவரைக்காய்:

    தோல் மெத்தென்று அடர்த்தியா இருக்க வேண்டும். தோல் மெலிந்து, விதைகள் உப்பலாகத் தெரிந்தால் அது முற்றிய காய்.

    கார்த்திக்-பாண்டியா அபாரம், தென்னாப்பிரிக்கா அணியினை வீழ்த்தி வெற்றி!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....