Monday, March 18, 2024
மேலும்
    Homeவானிலைதமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு-இந்திய வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு-இந்திய வானிலை ஆய்வு மையம்

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

    தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் கடந்த நவம்பர் மாதம் தொடக்கத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. பின்னர் அது வலுவிழந்தது. இதன் பிறகு பல மாவட்டங்களில் பரவலாக வடகிழக்கு பருவ மழை குறைந்தது. 

    இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். 

    பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8 ஆம் தேதியை ஒட்டி தமிழக-புதுவை கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது. 

    இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை (டிசம்பர் 3) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 4 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகவும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி; சீனாவின் அதிருப்திக்கு பதிலடி கொடுத்த இந்தியா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....