Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்மகளிர்பெண்களை அதிகமாக பாதிக்கும் வெள்ளைப்படுதல்... தடுக்க என்ன செய்ய வேண்டும்?

    பெண்களை அதிகமாக பாதிக்கும் வெள்ளைப்படுதல்… தடுக்க என்ன செய்ய வேண்டும்?

    பெண்களின் பிறப்புறுப்பிலிருந்து வெளியேறும் வெள்ளை நிற திரவம்தான் வெள்ளைப்படுதல் என்று கூறப்படுகிறது. இது எல்லா நேரங்களிலும் வெள்ளையாகவே இருக்கும் என்று சொல்லமுடியாது. அவர்களின் உடல் பாதிப்புக்கு ஏற்ப மஞ்சள், சாம்பல், பச்சை அல்லது பழுப்பு நிறத்திலும் வெளியேறும். இவை திடமான சீஸ் வகை போல் அதிகமாக வெளியேறினால் தீவிரமான பாதிப்பை உண்டாக்கும். உடல் பலவீனமடையும். எனவே இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

    மேலும், வெள்ளைப்படுதலுக்குக் காரணமான, பிறப்புறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மிக முக்கியமான சில தொற்றுகள் குறித்தும், அது ஏற்படுத்தும் அறிகுறிகள் குறித்தும் பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.

    சில நேரங்களில் இந்த வெள்ளைப்படுதல் மாதவிடாய் போன்றும் அவ்வப்போது வெளியேறி மாதவிடாய் வந்துவிட்டதோ நினைக்கும் அளவுக்கு ஏமாற்றும். சிலருக்கு மாதவிடாய் வரப்போகிறது என உணர்த்தும் விதமாக மாதவிடாய் நாட்கள் தொடங்கும் முன்பும், முடிந்த பின்பும் வெள்ளைப்படும்.

    வெள்ளைப்படுதல் எதனால் ஏற்படுகிறது?

    பெண்களுக்கு பொதுவாக 28 முதல் 45 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வரும். இதில் ரத்தப்போக்கு 2 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். இந்த மாதவிடாய் சுழற்சிக்கு நடுவே, அதாவது மாதவிடாய் வருவதற்கு 14 நாட்களுக்கு முன் வெள்ளைப்படும். இதனை அண்ட விடுப்பின் காலம் என்று அழைப்பர். அதாவது சினைப்பையிலிருந்து கருமுட்டை வெளி வந்து கர்ப்பப்பைக்கு வரும் நாட்கள் இவை. இது ஒரு இயற்கையான நிகழ்வு.

    வெள்ளைப்படுவதற்கான சில முக்கிய மருத்துவ காரணங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

    1. கர்ப்பப்பை வாய்ப்புண்
    2. கர்ப்பப்பை வாய் தொற்றுநோய்
    3. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
    4. கர்ப்பப்பை மற்றும் கர்ப்பப்பை சார்ந்த உறுப்புகளின்
    தொற்றுநோய்
    5. பிறப்புறுப்பின் புற்றுநோய்

    – இந்த ஐந்து காரணங்களால் வெள்ளைப்படுதல் ஏற்படுவது உறுதியானால் சிகிச்சை தேவை!

    பெண்கள் கவனிக்க வேண்டியவை என்ன?

    இயற்கையான காரணங்களினால் எல்லா வயது பெண்களுக்கும் வெள்ளைப்படுவது இயல்பு. ஆனால், எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்ற விழிப்புணர்வு நம் பலரிடம் இல்லை. இதில் நாம் கவனிக்க வேண்டியவை என்னவென்றால்…

    1. சானிட்டரி பேட் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் அளவுக்கு அதிகமாக வெள்ளைப்படும் போது
    2. இடைவெளியின்றி வெள்ளைப்படும்போது
    3. துர்நாற்றத்துடன் வெள்ளைப்படும்போது
    4. வெள்ளைப்படும்போது – வலி ஏற்பட்டால்
    5. வெள்ளை நிறம் அல்லாமல் வேறு நிறங்களில் (பச்சை, சிவப்பு) ஏற்படும்போது
    6. வெள்ளைப்படும்போது அரிப்பு ஏற்பட்டால்
    7. மாதவிடாய் முழுமையாக நின்ற பிறகு (Menopause) வெள்ளைபடும்போது
    8. குழந்தை பிறந்த பின் துர்நாற்றமும் வலியும் சேர்ந்து வெள்ளைப்படும்போது ஆகிய தருணங்களில் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டியது மிக அவசியம்!

    சில வீட்டு வைத்தியங்கள்:

    சாதாரண தண்ணீர் போன்ற வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்த சில வீட்டுக் குறிப்புகளும் பின்பற்றப்படுகிறது. நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வர சரி செய்யலாம். தனியா விதைகளை இரவு தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை காலையில் குடித்துவர வெள்ளைப்படுதல் நீங்கும். கொய்யா இலைகளை கொதிக்க வைத்து குளிர்ந்தபிறகு குடிக்கலாம். வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குளிர்ந்தபிறகு குடிக்கலாம். கீழாநெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து ஏழு நாள்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது பிரச்னையைச் சரிசெய்யும்.

    பெண்கள் செய்யவேண்டியவை:

    சுத்தமான உள்ளாடைகளை அணிய வேண்டும். நைலான் வகை உள்ளாடைகளை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.நம் பிறப்புறுப்பையும் அதை சுற்றி இருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். சில பெண்கள் மாதவிடாய் நாட்களில் நீண்ட நேரம் டாம்பூவை வைத்துக் கொள்வார்கள். இவர்களுக்கும் பிறப்புறுப்பை ரசாயனப் பொருட்கள் கொண்டும், வாசனை திரவியங்களின் ஸ்பிரே கொண்டும் கழுவுவதாலும் வெள்ளைப்படுதல் வரலாம். சுத்தமான நீரால் கழுவினாலே போதுமானது. தவிர உங்கள் மருத்துவரிடம், உங்களுக்கு உள்ள அனைத்து பிரச்னைகளையும் ஒளிவு மறைவின்றி தெரிவிப்பது உங்களுக்கு நல்லது!

    துப்பாக்கி வகை நாயினம் இதுதானாம்; காக்கர் ஸ்பானியல் ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....