Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்மகளிர்பனிக்குடம் உடைய இருப்பதை முன்னமே அறிவதற்கான அறிகுறிகள் இதோ!

    பனிக்குடம் உடைய இருப்பதை முன்னமே அறிவதற்கான அறிகுறிகள் இதோ!

    கர்ப்பகாலம் என்பது பெண்களின் வாழ்நாளில் மிகவும் முக்கியமான காலகட்டம். இந்த சமயத்தில் கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் பலர், அவர்களின் கர்ப்ப காலத்தின் இறுதி காலகட்டத்தில் அல்லது பிரசவம் நிகழ்வதற்கு முன்பாக பனிக்குடம் உடைந்து விட்டது அல்லது பனிக்குட நீர் வெளிவந்து விட்டது என்று கூற கேட்டு இருப்போம்.

    இது எதனால் ஏற்படுகிறது? அதற்கான மருத்துவ முறைகள் குறித்த தொகுப்பை இங்கே காணலாம்.

    பனிக்குட நீர் என்றால் என்ன?

    கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் இருக்கிறது. இது குழந்தையை பலவிதங்களில் பாதுகாக்கிறது. அமுக்கவிசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது. இத்திரவத்தைச்சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு உள்ளது.

    இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும். ஆனாலும் சில வேளைகளில் அதற்கு முன்னமே இது உடையலாம். இதனை மருத்துவர்கள் “Prelabour rupture of membrane” என கூறுவார்கள்.

    இதனால் குழந்தையைச் சுற்றியுள்ள திரவநீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று குழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

    இந்த நீர் ஊட்டச்சத்து நிறைந்தது. இந்த நீர் தாயின் உடலில் குறையும் போது குழந்தைக்கு பல வித பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    பனிக்குட நீர் உடைவதற்கான அறிகுறிகள்:

    பொதுவாக குழந்தையை பிரசவிக்க உங்கள் உடல் தயாராகும்போது, பனிக்குட தண்ணீர் உடைந்து உங்கள் யோனி வழியாக வெளியேறும். இது உங்கள் பிரசவத்திற்கு முன் அல்லது பிரசவத்தின் போது நிகழலாம்.

    உங்களது கர்ப்ப காலத்தில், திடீரென பிறப்பு உறுப்பு வழியே நிறையத் திரவம் (நீர் வெளியேறுதல்). இவ்வாறு ஒரு கர்ப்பிணிக்கு திடீரென நீர் வெளியேறினால் உடனடி யாக மருத்துவரை காண செல்ல வேண்டும்.

    பனிக்குட நீர் வெளியேறுகையில் அதில் இருந்து மணம் வெளிப்படாது; ஆனால் சிறுநீர் வெளிப்பட்டால் சிறுநீர் மணம் வெளிப்படும். இந்த மாற்றங்களை வைத்து பிறப்புறுப்பின் வழியே எது வெளிப்படுகிறது என்று கர்ப்பிணி பெண்கள் கண்டறிய முடியும்.

    பின்வரும் காரணங்களால் பனிக்குட நீர் உடைய வாய்ப்புள்ளது:

    எடை குறைவு

    புகை பழக்கம்

    சிகிச்சையளிக்கப்படாத சிறுநீர் பாதை நோய்த்தொற்று

    கர்ப்பத்தில் எந்த நேரத்திலும் யோனியில் இரத்தப்போக்கு ஏற்படுவது

    கர்ப்ப காலத்தில் உங்கள் கருப்பை வாயில் பிரச்சினைகள் இருப்பது.

    மருத்துவ முறைகள்:

    32 ஆவது வார கர்ப்ப காலத்திற்கு முன் பனிக்குட நீர் உடைப்பு நிகழ்ந்தால், மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு அதன்பின் கண்காணிக்கப்பட்டு குழந்தைப் பிறப்பு தூண்டப்படும்.

    ஆனாலும் அதற்குமுன் கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றினாலோ அல்லது தொப்புள் கொடி கீழிறங்குவது உறுதி செய்யப்பட்டாலோ உடனடியாக பிறப்பு தூண்டப்படும். இது யாருக்கு எல்லாம் ஏற்படும் என்று உறுதியாக கூற முடியாது.

    ஆனாலும் ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

    பனிக்குட நீர் வெளியேறிய பின் மருத்துவரிடம் எவ்வளவு விரைவாக செல்கிறீரோ அத்தனை நல்லது என்பதை மறவாதீர்கள்.

    கடன்களின் மீதான வட்டி விகிதம் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....