Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்திரைக்குப் பின்னால் உழைத்து, திரையில் உழைத்து போராடி மிளிர்ந்த சிவகார்த்திகேயன்- பர்த்டே ஸ்பெஷல்!

    திரைக்குப் பின்னால் உழைத்து, திரையில் உழைத்து போராடி மிளிர்ந்த சிவகார்த்திகேயன்- பர்த்டே ஸ்பெஷல்!

    ஒரு தனிப்பட்ட நடிகரின் வளர்ச்சி, பல தமிழக மக்களுக்கு நம்மில் ஒருவன் வளர்கிறான், நம்மில் ஒருவன் அங்கே ஜெயிக்கிறான் என்ற உணர்வை தந்தாயின் அது சிவகார்த்திகேயன் அவர்களின் வளர்ச்சியே! தற்போதைய தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நாயகன் சிவகார்த்திகேயன்!donதிரைக்கு பின்னால் உழைத்து, அது இது எது, கலக்க போவது யாரு, ஜோடி நம்பர் என சின்னத்திரையில் உழைத்து, பலரை மகிழச்செய்து, மிளிர்ந்து வெள்ளித்திரையில் நுழைந்த சிவகார்த்திகேயன் அங்கும் தனது உழைப்பை முதலீடாக செய்து வெற்றியை அறுவடை செய்து வருகிறார்

    sk

    எண்ணிக்கையின் அடிப்படையில் பார்ப்போமேயானால் இதுவரை 17 திரைப்படங்கள் மட்டுமே சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வெளிவந்திருக்கிறது ஆனால் இந்த பதினேழு திரைப்படத்திற்கே சிவகார்த்திகேயன் எட்டி இருக்கும் உயரம் என்பது அசாத்தியமானது. முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்று திருக்குறளின் வரிக்கு உலகில் இருக்கும் நிஜ எடுத்துக்காட்டுகளில் சிவகார்திகேயனும் ஒன்றனார்.

    தற்போதைய காலக்கட்டத்தில் குடும்பங்களை குடும்பமாகவே திரையரங்கிற்கு ஈர்த்துக் கொள்வதென்பது இலேசானது அல்ல. ஆனால் சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு வரும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் மேல் சொன்னவைக்கு சான்று!

    sk

    சிவகார்த்திகேயனின் காமெடி கலாட்டாக்கள் மட்டுமே ஆரம்பத்தில் அவருக்கு துணை இருக்க தற்போது துளியும் காமெடி கலாட்டாக்கள் செய்யாமலும் என்னால் திரைப்படம் நடிக்க முடியும் என்ற அளவிற்கு தன்னை மெருகேற்றி இருக்கிறார். நடனம், எமோஷன், ஆக்‌ஷன் என தற்போது அனைத்திலும் தன்னை முன்னிலை படுத்தி வருகிறார். வெறுமனே நடிகராக இல்லாமல் பாடகராகவும், தயாரிப்பாளராகவும் வெற்றி வலம் வருகிறார், சிவகார்த்திகேயன்!

    தமிழக திரையுலகில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாகியுள்ள சிவகார்த்திகேயன் அடுத்தாக தென்னிந்திய திரையுலகத்தில் அடையாளத்தை உருவாக்க காலடி எடுத்து வைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் இருபதாவது திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனை அனைவருக்கும் நன்கு தெரியும் என்றாலும், இதன் மூலம்தான் தென்னிந்திய அடையாளத்தை திறம்பட நிறுவ இருக்கிறார், சிவகார்த்திகேயன். 

    hbd sk

    எப்படி தமிழக மக்களை கவர்ந்தாரோ அதேப்போல் திறம்பட தென் இந்திய அளவிலும்  மக்களை கவரவும், மென்மேலும் வெற்றிகளை பெறவும் இந்த 37வது பிறந்தநாளில், சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கிறது, தினவாசல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....