ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு எனவும், காதுகள் இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
“உங்களில் ஒருவன் பதில்கள்” என்ற தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
ஆளுநர் அரசியலில் தலையிடக்கூடாது என அண்மையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதே; பாஜக அரசின் ஆளுநர்கள் செவிமடுப்பார்களா? என கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், இதுவரையிலான செயல்பாடுகளை பார்க்கும்போது, ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, எதிர்கட்சிகளை மறைமுகமாக இல்லை; வெளிப்படையாகவே பாஜக மிரட்டுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இது. தங்கள் வசம் இருக்கும் விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
தில்லி துணை முதல்வர் மணீஷ் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. பிரதமருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி இருக்கிறேன். எதிர்கட்சிகளை தேர்தல் தேர்தல் மூலமாக ஜெயிக்கலாமே தவிர விசாரணை ஆணையங்கள் மூலமாக வெல்ல நினைக்கக்கூடாது என பதில் அளித்துள்ளார்.
‘பணம் கையில் வந்தால்….’ – வைரலாகும் செல்வராகவனின் பதிவு