Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமூன்று தங்க பதக்கங்களை வென்ற குங்ஃபூ வீராங்கனை மீன் விற்கும் அவலம்!

    மூன்று தங்க பதக்கங்களை வென்ற குங்ஃபூ வீராங்கனை மீன் விற்கும் அவலம்!

    மணிப்பூர் மாநிலம் நிங்தோகோங்க் பகுதியைச் சேர்ந்தவர் அங்கோம் பினா தேவி வயது 36. மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர், கடந்த 2019ம் ஆண்டு கணவர் மறைவிற்கு பிறகு, அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

    வறுமை காரணமாக, அவர்களுடன் சேர்ந்து மீன் விற்க துவங்கினார். இருப்பினும், குங்ஃபூ மீது கொண்ட ஆர்வம் காரணமாக, பயற்சி பெற்று, சர்வதேச மற்றும் மாநில அளவில் நடந்த போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார்.

    போட்டிகளில் பங்கேற்பதற்கு அரசிடம் இருந்து எந்தவிதமான உதவியும் அவருக்கு கிடைக்கவில்லை. ஒரு போட்டியில் பங்கேற்க 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்திருந்தாலும், போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற பிறகும் எந்தவிதமான ஊக்கத்தொகையும் கிடைக்கவில்லை. தற்போது வறுமை காரணமாக மீன் விற்று வருகிறார்.

    இது தொடர்பாக அங்கோம் பினா தேவி கூறியதாவது:

    கடந்த 2018 ம் ஆண்டு, நேபாளத்தில் தெற்கு ஆசியா குங்பூ அமைப்பு சார்பில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்றேன். இதுவரை தேசிய அளவில் 7 பதக்கங்களையும், மாநில அளவில் 5 தங்க பதக்கங்களையும் வென்றுள்ளேன். 5 வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளேன். பல தங்க பதக்கங்களை பெற்ற பிறகும், வழக்கமான உணவை தவிர வேறு எந்த சத்தான உணவையும் எடுத்துக் கொள்வது இல்லை.

    போட்டிகளில் பங்கேற்க விருப்பம் உள்ளது. ஆனால், வறுமை காரணமாக மீன் விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்தவும், குழந்தைகளின் படிப்புக்கும் செலவு செய்ய வேண்டி உள்ளது. ஆனால், போட்டி காரணமாக, போதிய அளவு வருமானம் கிடைப்பது இல்லை. அரசு உதவி செய்தால், போட்டிகளில் பங்கேற்க உதவியாக இருக்கும்.

    சர்வதேச மற்றும் தேசிய அளவில் நடந்த குங்ஃபூ போட்டிகளில் பல பதக்கங்களை வென்று, நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனை அங்கோம்பினா தேவி, வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கிறார். அவரது நியாமான கோரிக்கைக்கு கண்டிப்பாக அரசு உதவும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

    ‘மகனுக்கு சுதந்திரத்தை பரிசளிக்க 30 வருடங்களுக்கும் மேலாய் போராடிய தாய்’ – பேரறிவாளன் விடுதலை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....