Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவுக்கு புதிய ராணுவ தளபதி : ராணுவத்தின் பல முக்கிய பொறுப்புகளில் இருந்த இந்த தளபதி...

    இந்தியாவுக்கு புதிய ராணுவ தளபதி : ராணுவத்தின் பல முக்கிய பொறுப்புகளில் இருந்த இந்த தளபதி யார் ?

    இந்தியாவின் புதிய இராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே பதவியேற்றார். முன்னாள் தளபதி எம்.எம்.நரவனேவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே பதவி ஏற்றுள்ளார். துணைத்தளபதியாக பதவி வகித்து வந்த பாண்டே, பொறியாளர்கள் படைப்பிரிவில் இருந்து தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் ஆவார். 

    ராணுவ துணைத்தளபதியாக பதவி ஏற்பதற்கு முன்பாக மனோஜ் பாண்டே, சிக்கிம் மற்றும் அருணாச்சல் பகுதிகளில் உள்ள உண்மையான கட்டுபாட்டு கோட்டை பாதுகாத்து வரும் கிழக்கு ராணுவ பிரிவுக்கு தலைமை தாங்கி வந்தார். ஜெனரல் பாண்டே பதவி ஏற்கும் போது சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்வதில் இந்தியா சிக்கலை சந்தித்து வந்தது. 

    ஒரு ராணுவத்தளபதியாக அவர் இந்திய கடற்படை மற்றும் இந்திய வான்படை ஆகியவற்றை அரசாங்கத்தின் தியேட்டர் உத்தரவுகளுக்கு ஏற்றவாறு செயல்பட வைக்க வேண்டும். கடந்த மாதம் டிசம்பரில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த இந்தியாவின் பாதுகாப்புப் படைத்தலைவர் பிபின் ராவத் அவர்களால் இந்த தியேட்டரிசேஷன் முறை உருவாக்கப்பட்டது. அவர் இறந்த பிறகு அவருடைய பதவிக்கு இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை. 

    தன்னுடைய புகழ்பெற்ற ராணுவ வாழ்க்கையில், இந்தியாவில் ஒரே முப்படைகளை அதிகாரம் செய்யும் பதவியான அந்தமான் மற்றும் நிகோபார் பதவியை அதிகாரம் செய்யும் ராணுவத்தின் தலைமை அதிகாரியாகவும் பதவி வகித்து இருந்தார். 

    நேஷனல் டிஃபென்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவரான இவர், 1982ஆம் ஆண்டு கார்ப்ஸ் ஆஃப் இன்ஜினியர்ஸ் என்ற பதவியிலும் இருந்துள்ளார். இந்தியாவின் பிரச்சினை மற்றும் கிளர்ச்சி நிறைந்த பகுதிகளில் பல மதிப்புமிக்க கட்டைளைகள் மற்றும் சிறந்த பணியாளர்களை இவர் நியமித்துள்ளார்.

    இந்திய ராணுவத்தின் முக்கிய பொறுப்பான தளபதி பொறுப்புக்கு, தற்பொழுது மனோஜ் பாண்டே வந்திருப்பது ராணுவத்திற்கு ஒரு மிகப்பெரிய பலமாக வந்துள்ளது. 

    இதையும் படிங்க; ட்விட்டரை பதம் பார்க்கப் போகும் எலான் மஸ்க்: வகுத்துள்ள புதிய திட்டங்கள் என்னென்ன?

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....