ஜன்னல் ஓரத்தின் இருக்கை வேண்டும் என முன்பதிவு செய்திருந்த விமான பயணி ஒருவருக்கு, பயணத்தின்போது பெரிய அதிர்ச்சியே காத்திருந்தது.
பொதுவாக பயணங்களின்போது ஜன்னல் ஓரத்தின் இருக்கையில், அமர பலருக்கும் பிடிக்கும். வேடிக்கை பார்த்தபடி நன்றாக காற்று வாங்கிக் கொண்டே செல்லவும் அப்போது மெல்லிசை கேட்கவும் பலரும் விரும்புவர்.
அந்த வகையில், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது அங்கிருக்கும் அழகான காட்சியை காண வேண்டும் என்பதற்கு அனிருத் என்பவர் பிரிட்டிஷ் ஏர்வேஸில் முன்பதிவு செய்தார். விமானத்தில் ஏறிய அவருக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது.
அனிருத் முன்பதிவு செய்திருந்த ஜன்னல் இருக்கையில் ஜன்னலே இல்லை. இதனால் கோபம்கொண்ட அனிருத், தன்னுடைய ஜன்னலோர இருக்கை எங்கே என கேள்வி கேட்டு பிரிட்டிஷ் ஏர்வேஸை தனது ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்து அந்த புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
இதற்கு எந்த பதிலும் அளிக்காத அந்நிறுவனத்தை மீண்டும் டேக் செய்து, நான் கேட்டதற்கு பதில் எங்கே? என திரும்பவும் கேட்டுள்ளார். இவர் பயணித்த அதே விமானத்தில் பறந்த மற்றொரு பயணி, தான் எடுத்த விடீயோவை பகிர்ந்து தானும் அந்த விமானத்தில் தான் இருந்ததாக தெரிவித்துள்ளார். தற்போது இந்தப் பதிவுகள் ட்விட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது.
I paid extra for a right side window seat because it’s supposed to be beautiful when you land into Heathrow.@British_Airways where’s my window yo? pic.twitter.com/2EBYlweAfW
— Anirudh Mittal (@dhumchikdish) February 5, 2023
ஆறு ஆண்டுகளில் உயர் கல்விக்காக 30 லட்சம் பேர் இந்தியாவிலிருந்து அயல்நாடுகளுக்கு பயணம்!