எதற்கு எடுத்தாலும் கோபம் வருகிறதா? அமைதியாக இருக்க வழி தேடும் உங்களுக்காக தான் இந்தப்பதிவு, இனி இப்படி இருந்து பாருங்கள் அமைதியாய் இருப்பவர்களைப் போன்று,
- அமைதியான நபர் அன்றாட நடைமுறைகளை மட்டுமே செய்வார். அதில் தான் அவரின் அமைதி ஒளிந்துள்ளது. தான் என்னென்ன வேலைகள் எப்போது செய்ய வேண்டும் என்பதை முன்னரே குறித்து வைத்துக் கொள்வார்.
- அமைதியாய் இருக்கும் நபர் தான் செய்யும் வேலைகளில் கவனமுடனும் தெளிவுடனும் இருப்பார். ஆனால் உலகத்தையே நான் தான் பெரிய வேலைக்காரன் என்ற எண்ணமும் திமிரும் சிறிதும் இருக்காது. உலகத்தின் சிறிய இடத்தையே அமைதியானவர் விரும்புவர்.
- அமைதியான நபர் தான் செய்கின்ற வேலையை விரும்பிச் செய்வார். சமைத்தல், வரைதல், எழுதுதல், தோட்ட பராமரிப்பு என அது எந்த வேலையாய் இருந்தாலும் ஈடுபாடுடன் செய்வார்.
- அமைதியான நபர் பொதுவாகவே அவசரப்படுவதை விரும்ப மாட்டார். காரணம் அதற்கு முன்னேற்பாடுகளைச் செய்வார். ஆகையால் முன்னேற்பாட்டுடன் இருங்கள் அவசரத்தை தவிருங்கள்.
- வாழ்வில் சில சுய கட்டுப்பாடுகளுடனும் ஆரோக்கியமான முறையிலும் அமைதியை விரும்புவர் வாழ்வர். மேலும் இவர்கள் வேலையின் போது தகுந்த இடைவெளிகளை எடுத்துக் கொள்வர். அது வேலையாகவும் இருக்கலாம் இல்லை எந்த செயலாகவும் இருக்கலாம்.
- பொதுவாக அமைதியான நபர் தமக்கு பிடித்த இடத்திற்கு தனியாகவோ அல்லது பிடித்த நபருடனோ நடந்துச் செல்வார். நிச்சயம் நீங்கள் இப்படி செய்து பாருங்கள். நடப்பது மனதுக்கு மட்டுமல்ல உடலுக்கும் மிக நல்லது.
- உலகத்துடன் ஒத்தும் எதிரியாக இருந்தாலும் அன்போடு நடந்தும் கொள்வார் அமைதியை விரும்புவர். மேலும் எந்த சூழ்நிலையிலும் பணத்தையோ பொருளையோ நம்பிப் பழக மாட்டார்.
- அமைதியாய் இருப்பவர் தனது நாட்களுக்கான திட்டத்தை வகுத்து அதன்படி செயல்படுவார், அது சரியாக வரவில்லை என்றாலும் அதற்காக வருந்தாமல் இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தகுதிப்படுத்திக் கொள்வார்.
- அமைதியாய் இருக்கும் நபர் தனது கைப்பேசியை அளவாக பயன்படுத்துவார். செய்திகள் வாசிப்பது, செய்தி அனுப்புவது என முக்கியமான விடயங்களுக்கு மட்டுமே தனது கைப்பேசியை உபயோகம் செய்வார்.
இதையும் படித்து பாருங்கள்:
உங்கள் மனதை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டியவை?
இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.