ராஜமௌலியின் திரைக்கதையில் உருவான ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் இணைந்து நடித்துள்ளனர். கதாநாயகியாக ஆலியா பட் நடித்துள்ளார். மேலும் முக்கிய பல பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆர் ஆர் ஆர் ஆர் படத்தில் மரகதமணி இசை அமைத்துள்ளார். இந்தப்படத்தை டி வி வி தனய்யா தயாரிக்க லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ், தமீனா பிலிம்ஸ் மற்றும் பென் இந்தியா லிமிடெட் வெளியிட்டுள்ளது.
ராஜமௌலியின் பாகுபலி இரண்டு பாகங்களை பார்த்த அனைவருக்குமே இந்தப் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியது. அதுமட்டும் அல்லாமல் இரண்டு முன்னணி நடிகர்களான ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் இணைந்து நடித்தது இன்னும் பெரிய ஆவலைத் தூண்டியது.
மேலும் தமிழில் கார்க்கி வரிகளில் ராகுல் மற்றும் நிசார் இணைந்து பாடிய நாட்டு கூத்து பாடல் அனைவரையும் நடனமாடச் செய்தது. இந்த பாட்டின் உற்சாகத்தைக் கண்டு மேலும் எதிர்பார்ப்புக் கூடியது. படம் அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்ற பல கேள்விகளை எழுப்பியது. கடந்த ஜனவரி மாதமே திரைக்கு வருவதாக இருந்த இப்படம் பெருந்தொற்றின் காரணமாக அப்போது தற்காலிமாக வெளியிடவில்லை.
மக்களிடையே பெரிதும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம், இன்று திரைக்கு வந்தது.
படம் பார்த்துவிட்டு மக்கள் சொல்லிய கருத்துக்கள்:
- ராஜமௌலியின் திரைக்கதை மிகவும் அருமையாக இருந்தது.
- ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் இருவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் இருவேறுபட்ட நடிப்பினை ஒன்றாக பார்த்தது மிகவும் அருமையாக இருந்தது.
- சிறிது இடத்தில் சற்று மெதுவாக சென்றாலும் அது தெரியாத வகையில் நன்றாக மீண்டும் கதையை நகர்த்தி உள்ளனர்.
- சினிமாட்டோ கிராபி மிகவும் அருமையாக இருந்தது படத்தின் கதையை மறக்கும் அளவிற்கு விஷ்வல்ஸ் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
- இருவர் சேர்த்து வரும் காட்சிகள் அனைத்தும் அருமை.
- ஆலியா பட் எதுக்கு இருந்தார் என்று புரியவில்லை. இந்தக் கதாபாத்திரம் இருந்தது ஆனால் இல்லாமல் இருந்தாலும் நன்றாகத் தான் இருந்திருக்கும்.
- பாட்டு அனைத்துமே அருமை, இருவர் ஆடிய நடனங்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தது.
- பாகுபலியை விட மிகவும் அருமை எனவும் சிலப் பேர் பாகுபலி வேறு திரைக் கதை இதுவேறு வகையான திரைக்கதை இந்தப் படத்தையும் பாகுபலி படத்தையும் ஒப்பிட முடியாது என்றும் கூறினர். சிலர் இந்தப் படம் தான் பாகுபலி மூன்று இது தான் என்றும் கூறினர்.
- இந்தப் படத்தை குடும்பத்துடன் தாராளமாக சென்று பார்க்கலாம்.
- மூன்று மணி நேரம் சென்றது தெரியவில்லை என்றும் கூறினர்.
- ராஜமௌலியின் திரைக்கதை என்றாலே அது வேறுதான் என்றனர்.
- தமிழ் மக்களுக்கு அதிக மிகைப்படுத்தி காட்டியது பிடிக்குமா என்பது தெரியவில்லை நிச்சயம் தெலுங்கு மக்களுக்கு இந்த மிகைப்படுத்துதல் சரியாக இருக்கும்.
- இரண்டாம் பாதிக்கும் முதல் பாதி முடிவிலும் ஒரு தரமான சம்பவம் இருக்கிறது என்றும் கூறினர்.