Friday, March 22, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

    நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதில் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார வெற்றி பெற்றார்.

    இதைத்தொடர்ந்து, மார்ச் 10 ஆம் தேதி தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக, அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    அப்போது அவருக்கு லேசான கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனியார் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல், அவர் அவதி அடைந்ததாகவும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

    இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், தற்போது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மேலும், இதய பிரச்சனையிலிருந்தும் அவர் மீண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

    ஈவிகேஎஸ் இளங்கோவன் MLA மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் பூரண நலமுடன் இருக்கிறார். நலம் பெற வாழ்த்திய அனைத்து நல்லுங்களுக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ள தலைவர், அவர்கள் சிறிது ஓய்வுக்கு பின்னர் விரைவில் சட்டமன்ற பணிகளுக்கு திரும்ப ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளதாக அவரது முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    யூடியூப்பில் சாதனை செய்யும் பொன்னியின் செல்வன்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....