மணிப்பூரில் இன்று காலை 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று காலை 6.14 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அச்சத்தை ஏற்படுத்தியதாக உக்ரு நகர் வாசிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், இது மிதமான நிலநடுக்கம் என்று தேசிய நிலநடுக்க மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கடந்த மாதம் 30-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தில் இருமுறை நிலநடுக்கம் உணரப்பட்டிருந்தது. மேலும், இந்த கட்ச் பகுதியானது நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ள இடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிபிசி ஆவணப்படத்துக்கு தடை கோரிய வழக்கு; உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு!