Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பீஸ்ட் கதை இப்படித்தான் இருக்கும், விஜய் இப்படித்தான் - நெல்சனே கூறியவைகள்!

    பீஸ்ட் கதை இப்படித்தான் இருக்கும், விஜய் இப்படித்தான் – நெல்சனே கூறியவைகள்!

    பீஸ்ட், தற்போது சினிமா ரசிகர்கள் பலரிடத்திலும் அதிகம் உச்சரிக்கப்படும் பெயராக இருந்து வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படமானது, வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. தொடர்ந்து படத்தைப்பற்றிய பேச்சுகள் இருந்தாலும், பீஸ்ட் படக்குழுவிடம் இருந்து போதுமான அறிவிப்புகள் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று வந்த அறிவிப்பு ஒன்று தளபதி விஜய் ரசிகர்களை மட்டும் அன்றி, பீஸ்ட் திரைப்படத்திற்காக காத்திருக்கும் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆம்! வெளிவந்த அறிவிப்பின்படி, பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலாரானது வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் முழு குதூகலத்தில் உள்ளனர். இருப்பினும் திரைப்படம் வெளியாக இன்னும் 13 நாட்களே இருக்கும் நிலையில் திரைப்படத்தின் புரோமஷன் பணிகளில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மெத்தனம் காட்டி வருவதாக விஜய் ரசிகர்களிடம் இருந்து தொடர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளும் அப்படியாகத்தான் இருக்கிறது.

    ட்ரைலர் வெளியீடு குறித்து அறிவிப்பை வெளியீடுகையில், இனி எங்க ஆட்டம் வேற மாதிரி இருக்கும் என்ற வசனத்தையும் தயாரிப்பு நிறுவனம் கூறியிருக்கிறது. அதனால் தற்போதைக்கு விஜய் ரசிகர்களை சாந்தப்படுத்துவதாக இந்த அறிவிப்பு இருக்கிறது.

    beast

    மேலும், வெளிவந்த அறிவிப்பில் இடம்பெற்றிருக்கும் விஜய் அனைவரையும் கவர்ந்து வருகிறார் என்றே கூற வேண்டும். இதுவரையில் இப்படியான விஜயை எவரும் பார்த்ததில்லை என்பதே உண்மை. போர் விமானம் எனக்கூறப்படும் விமானத்தை ஓட்டுவதுப்போலவே விஜய் அவர்கள் காட்சியளிக்கிறார். இது பலரையும் ஆவலடையச் செய்துள்ளது.

    பீஸ்ட் திரைப்பட இயக்குநர், நெல்சன் தீலிப்குமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், பீஸ்ட் திரைப்படத்தின் ஒன்லைன் மிகவும் இயல்பானது என்றார். அதோடு ஒரு நெருக்கடியான சூழல், அந்தச் சூழலை நாயகன் எப்படிக் கையாளுகிறார், அந்தச் சூழலில் ஆபத்தில் சிக்கியவர்களை எப்படிக் காப்பாத்துகிறார் என்பதுதான் கதை என்றும் அவர் கூறியுள்ளார்.

    தளபதி விஜய் அவர்கள் குறித்து நெல்சன் தீலிப்குமார் கூறியதுப் பலரையும் கவர்ந்து வருகிறது. ஆம்! விஜய் மிகவும் எளிமையான மனிதர் என்றும் எப்போதும் சாந்தமாகவே இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். அதோடு, விஜய் அவர்கள் எளிமையாக வாழ்வை நகர்த்தும் விதம் அழகியலாக இருக்கிறதென்று தெரிவித்துள்ளார்.

    மேலும், ‘ அவரோடு ஒரு ஷாப்பிங் போனாக்கூட, ரொம்பவே சிம்பிளானதைத்தான் வாங்குறார்.நூறு ரூபாய் பிரியாணியா இருந்தாக்கூட, அதையும் சந்தோஷமா சாப்பிடுறார். அப்படியொரு சிம்பிள் லைஃப் ஸ்டைல் அவரோடது என்றும் நெல்சன் கூறியது பலரையும் வியப்பிலும் ஆனந்தத்திலும் ஆழ்த்தியுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....