Tuesday, March 19, 2024
மேலும்
    Homeஆன்மிகம்விஷ்ணுவின் அவதாரங்களின் பின்னணியில் ஒளிந்துள்ள மனிதனின் பரிமாண வளர்ச்சி!

    விஷ்ணுவின் அவதாரங்களின் பின்னணியில் ஒளிந்துள்ள மனிதனின் பரிமாண வளர்ச்சி!

    விஷ்ணு 10 அவதாரங்களில் தோன்றி உலகத்தையும் மக்களையும் காப்பாற்றினார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் அவதரித்த அவதாரங்களின் பின்னால் மனித இனத்தின் பரிமாண வளர்ச்சியும் இணைந்துள்ளது அதை இங்கு இணைத்துக் காண்போம். 

    மச்ச அவதாரம்: 

    சோமுகாசுரன் என்ற அசுரன் வேதங்களை திருடிச் சென்று கடலுக்கு அடியில் மறைத்து வைத்ததை பெரிய சுறாவை போன்று உருமாறி அவனை வதம் செய்தது இந்த அவதாரத்தின் சிறப்பம்சமாகும். மேலும் உலகம் தோன்றியவுடன் முதலில் தோன்றிய உயிரினம் கடலில் வாஸ்த்த உயிரினம் தான் என்று அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    கூர்ம அவதாரம்: 

    திருப்பாற்கடலை அசுரர்களும் தேர்வர்கள் கடைந்த போது மத்துப் போல் இருந்த மந்திரமலை கடலுக்கு அடியில் முழுகாமல் இருக்க விஷ்ணு கூர்ம அவதாரமான ஆமை உருவில் தோன்றி அந்த மலையை முதுகில் தாங்கினார். மேலும் அறிவியல் ஆராய்ச்சி உண்மையாக அடுத்தக்கட்ட பரிமாண வளர்ச்சியான நிலத்திலும் நீரிலும் வாழும் உயிரினம் தான் ஆமை என்பதை உணர்த்துகிறது.

    வராக அவதாரம்: 

    இரண்யாட்சன் என்ற அசுரன் தேவர்களைக் கொடுமைப் படுத்தியதால், இவனைக் கொல்ல வராக அவதாரம் எடுத்து விஷ்ணு அவனை அழித்தார். இது அடுத்தக்கட்ட பரிமாண வளர்ச்சியான பாலூட்டி உயிரினம் தோன்றியதை  அறிவியல் சான்றுகள் குறிப்பிடுகின்றன.

    நரசிம்ம அவதாரம்: 

    விஷ்ணுவின் பக்தனான பிரகலாதன் என்பவனை இரணியன் என்ற அசுரனிடம் இருந்து காப்பாற்ற நரசிம்ம அவதாரத்தை எடுத்து இரண்ணியனை வதம் செய்தார். இது அடுத்தக்கட்ட பரிமாண வளர்ச்சியான மிருகமும் மனிதனும் கலந்தது.

    வாமன அவதாரம்: 

    மலை நாட்டை ஆண்டுவந்த மகாபலியின் கொட்டத்தை அடக்க குள்ள மனிதன் (வாமனன்) உருவம் கொண்டு வதம் செய்தார். இது அடுத்தக் கட்ட பரிமாண வளர்ச்சியான முதல் மனிதனான குள்ள மனிதன்.

    பரசுராம அவதாரம்:

    விஷ்ணு சப்தகன்னி முனிவரின் மகனாக பிறந்து அவரின் சொல்லில் வளர்ந்து தந்து தாயின் தலையையே கொய்தார், பிறகு அவரிடமே வரம் கேட்டு உயிர்ப்பித்தார். இது அடுத்தக் கட்ட பரிமாண வளர்ச்சியான மனிதனின் வேல் அம்பு வேட்டையாடுதல் போன்றவற்றைக் குறிக்கிறது. 

    ராம அவதாரம்: 

    பெற்றோர் சொல் கேட்டு நடக்கவும், ஒருவனுக்கு ஒருத்தி என்றும் சிவன் பக்தனாய் இருந்து தன் மனைவியை கவர்ந்தமையால் ராம அவதாரமாக இராவணனை வதம் செய்தார். அறிவியல் சார்ந்த உண்மையில் இது அடுத்தக்கட்ட பரிமாண வளர்ச்சியான சமூகம், மக்கள் என மேன்மைப்பட்டதை உணர்த்துகிறது.

    பலராம அவதாரம்:  

    விஷ்ணுவின் இருக்கை அமர்வான ஆதிசேசன்  வேண்டுதளுக்கு ஆசிக் கொடுத்து கிருஷ்ணனுக்கு அண்ணனாகவே தோன்றினார் விஷ்ணு. இதில் அடுத்தக்கட்ட பரிமாண வளர்ச்சியாக மனிதன் வேட்டையாடி வந்ததை குறைத்து நிலத்தை சுத்தப்படுத்தி உழுது பயிர் செய்து உண்டதைக் குறிக்கிறது. 

    கிருஷ்ண அவதாரம்:

    சிவனின் ரூபமாக கிருஷ்ணன் தோன்றி பாரதப் போருக்கு விதிவிலக்காய் இருந்தார். இது அறிவியல் உணர்த்தும் அடுத்தகட்ட வளர்ச்சியான வாழும் நெறிமுறைகளை வகுத்தல், தர்மம் அதர்மம் எதுவென்று பிரித்தல் போன்றவையில் அடங்கும். 

    கல்கி அவதாரம்:

    விஷ்ணுவின் கல்கி அவதாரம் ஏற்றம் அடைந்துக் கொண்டே வருகிறது… பார்ப்போம் இறைவன் தோன்றும் நேரத்தில் நாம் உயிரோடு இருந்தால்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....