Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்துருவ நட்சத்திரம் குறித்து வெளிவந்த தகவல்..உற்சாகத்தில் ரசிகர்கள்!

    துருவ நட்சத்திரம் குறித்து வெளிவந்த தகவல்..உற்சாகத்தில் ரசிகர்கள்!

    நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள  துருவ நட்சத்திரம் பட வேலைகள் மே மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. 

    கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த திரைப்படம்தான், துருவ நட்சத்திரம். இத்திரைப்படத்தில், நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, சிம்ரன் போன்றோர் நடித்துள்ளனர். மேலும், இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 

    துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் இருந்து வெளிவந்த முன்னோட்டம் திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இத்திரைப்படத்தில் இருந்து வெளிவந்த ‘ஒரு மனம்’ பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

    இப்படியாக, நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்ற துருவ நட்சத்திரம், தனது முழுப்படப்பிடிப்பை நிறைவு செய்யவில்லை. பல்வேறு காரணங்களால் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நின்றுவிட்டது. இருப்பினும், துருவ நட்சத்திரம் எப்போது திரைக்கு வரும் என்று திரைப்பட ரசிகர்கள் பலர் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால், துருவ நட்சத்திரம் திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.

    இதன் பின்பு சமீபத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தின் பின்னணி இசைப்பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில், ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, மே மாதத்திற்குள் துருவ நட்சத்திரம் பட வேலைகள் முடிவடைந்துவிடும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. 

    முன்னதாக, சோனி தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில், ‘இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் உங்களை ஜான் சந்திப்பார்.’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    டிக்டாக்கை தடை செய்ய அமெரிக்க அரசு முயற்சி; குற்றம் சாட்டிய சீனா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....