Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு தனுஷ் சொன்ன வாழ்த்து - ரசிகர்கள் வேதனை!

    முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு தனுஷ் சொன்ன வாழ்த்து – ரசிகர்கள் வேதனை!

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள காணொளி பாடல்தான் பயணி! ஏறத்தாழ ஒன்பது வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா அவர்கள் இயக்கி வெளியாகும் இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உள்ளது. பாடலும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்பாடலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டார். பல திரைப்பிரபலங்களும் இக்காணொளி குறித்து தங்களின் கருத்துகளையும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு தங்களின் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

    இப்படியான சூழலில்தான் தனுஷ் அவர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இப்பாடலுக்கு தன் வாழ்த்தை தெரிவித்துள்ளார். தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் தங்களின் நெடுங்கால திருமண வாழ்வை சமீபத்தில் முறித்துக்கொண்டனர். இருவரும் விவாகரத்து பெறுவதாக அதிகாரப்பூர்வமாக தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்தனர்.

    அதனை தொடர்ந்தும் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்று பலர் தெரிவித்து வந்தனர். இருவரின் நெருங்கிய வட்டாரங்களும் இருவரும் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கூறி வந்தனர். தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா அவர்களும் இருவரும் இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்றார். இதனால் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என எண்ணியவர்களுக்கு சிறிதே நம்பிக்கை பிறந்தது.

    ஆனால், இருவரும் இனி இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்பதுப்போல் தனுஷ் அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை பதிந்துள்ளார். ஆம்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளிவந்துள்ள காணொளி பாடலுக்கு “வாழ்த்துகள் என் நண்பரே” என்று குறிப்பிட்டுள்ளது பலரையும் வியப்பில் ஆழத்தியுள்ளது.

    தோழி காதலி மனைவி என இருந்த ஐஸ்வர்யா அவர்களை தனுஷ் நண்பர் என்று குறிப்பிட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. தனுஷ் அவர்களின் இந்த வாழ்த்துக்கு “நன்றி தனுஷ்” என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் பதில் பதிவை பதிந்துள்ளனர். இந்நிகழ்வு தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என எண்ணியவர்களின் நம்பிக்கையை முற்றிலுமாக கலைத்து விட்டது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....