Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபண மோசடியில் ஈடுபட்ட நபர் - சைபர் கிரைமின் சாமர்த்திய வேலை!

    பண மோசடியில் ஈடுபட்ட நபர் – சைபர் கிரைமின் சாமர்த்திய வேலை!

    ரவிசங்கர் என்பவர் இணையதளம் மூலமாக பண மோசடியில் ஈடுபட்டதால்  தீவிரமான தனிப்படை கொண்டு துரத்தி பிடித்தனர் சைபர் கிரைம் போலீசார்.

    திருச்சி சுங்கச் சாவடியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் தனது மனைவிக்காக இணையதளத்தில் வேலை தேடி வந்துள்ளார். அதே சமயம் ரவி சங்கர் பண மோசடியில் ஈடுபட தக்க நபரை எதிர் பார்த்திருக்கிறார். 

    கிருஷ்ணகுமார்  ரவி சங்கருக்கு இணைய தளம் மூலம் நண்பராக நன்றாக பேசி மயக்கி, உங்கள் மனைவிக்கு நான் வேலை வாங்கி தருகிறேன் எனக் கூறி சிறிது சிறிதாக சுமார் 29 லட்சம் வாங்கியிருக்கிறார்.  

    ஆனால், ஒரு வேலையும் கூறவில்லை. பிறகு இவர் வேலை வேண்டாம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டதற்கு, அப்போது இப்போது என ஏமாற்றியபடியே இருந்திருக்கிறார். இந்நிலையில் சந்தேகப்பட்ட  கிருஷ்ணகுமார் இவர் ஏமாற்றுகிறார் என்பதை உணர்ந்து, ரவிசங்கரின் சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு சென்றுகிறார். ஆனால், அங்கே சென்றும் ரவிசங்கரை காண முடியாததால் வீடு திரும்பியுள்ளார். மிகவும் மன வேதனைப் பட்ட இவர் திருச்சி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். cyber crime security

    சைபர் கிரைம் போலீசார் காவல் ஆய்வாளர் அன்பு செல்வம் தலைமையில்  தனிப்படை அமைத்து ஆந்திரா விரைந்து சென்று ரவி சங்கரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். தீவிர விசாரணைக்கு பின்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்து முசிறி சிறையில் அடைக்கப்பட்டார் ரவி சங்கர். 

    இணைய தளத்தில் நமக்கு சிறிது இல்ல பெரிய கவனம் தேவை மக்களே…

    யாரு எவன் என்று தெரியாமல் இப்படி எல்லாம் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....