Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகுழந்தையின் மதியிறுக்கத்தால் தாய் செய்த காரியம் - உருக்கத்தில், அக்கம் பக்கத்தினர்!

    குழந்தையின் மதியிறுக்கத்தால் தாய் செய்த காரியம் – உருக்கத்தில், அக்கம் பக்கத்தினர்!

    குழந்தைக்கு ஏற்பட்ட மதியிறுக்கத்தின்(autism spectrum disorder) காரணமாக தாயே தன் குழைந்தையைக் கொன்றுவிட்டு, அவரும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் செங்கல்பட்டு அருகே அரங்கேறியுள்ளது. 

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் திருக்கழுகுன்ற சாலையில், நெய்க்குப்பம் கிராமத்தில், பூபதி-கோடீஸ்வரி என்ற இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஹரிணி மற்றும் தேவி என்ற இரு மகள்களும் இரண்டரை வயது ஹரிஹர சுதன் என்ற மகனும் பிள்ளைகள் ஆவர். 

    இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஹரிஹர சுதன் என்ற தங்கள் மகனுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அந்தக் குழந்தையைக் கூட்டிக் கொண்டு பரிசோதனைக்கு சென்றுள்ளனர். பரிசோதனையும் நடந்துள்ளது. வாய் பேசுவதற்கான எந்தவித சாத்தியக் கூறுகளும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

    இதனால், மிகுந்த மனஉளைச்சலில் இருந்த இவர்கள் வீடு சென்றுள்ளனர். அன்றிலிருந்து கணவன் மனைவி இடையே வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பூபதி நேற்று காலை வேலைக்கு சென்றுள்ளார். இரண்டு பெண் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார் கோடீஸ்வரி. மாலை பள்ளி முடித்து வந்த குழந்தைகளுக்கு காத்திருந்தது அதிர்ச்சி, வீட்டின் கதவு உட்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனை அறியாத குழந்தைகள் வெளியிலேயே அமர்ந்திருந்தனர். இரவு பூபதி வீட்டின் கதவை உடைத்து பார்த்ததும் தான் தெரிகிறது தனது மனைவி தூக்கில் தொங்கியது. 

    பின் அதிர்ச்சியிலும் பதற்றத்திலும் தனது குழந்தையை தேடியுள்ளார். வெகு நேரமாக தேடியும் குழந்தை கிடைக்காததால் வீட்டின் பின்புறம் சென்று பார்த்துள்ளார். அப்போது குழந்தை குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த அவர்  மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின், அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். 

    தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் இரண்டு உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இதையும் படியுங்கள், அதிகரிக்கும் கொரோனா – 20 கோடி தடுப்பூசிகள் வீணா? என்ன சொல்கிறது தடுப்பூசி நிறுவனம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....