Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியீடு?- அண்ணாமலை அறிவிப்பு

    அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியீடு?- அண்ணாமலை அறிவிப்பு

    தமிழ்நாடு அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வருகிற ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கையில் கட்டி இருக்கும் கடிகாரம் பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். 

    இதைத்தொடர்ந்து இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, கடிகாரரத்தின் பில் மற்றும் தனது சொத்து மதிப்போடு திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவித்து இருந்தார். 

    அதோடு, சொத்து பட்டியல் மற்றும் அதன் இருப்பிடம் ஆதாரமாக வெளியிடப்படும் என்றும், ஒரு பென்டிரைவில் அதன் நகல் ஊடக நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். துபாயில் வணிகம், வணிக வளாகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் அவர்களின் அனைத்து முதலீடுகளும் அதில் பிரதிபலிக்கும். 10 ஆண்டு கால வங்கிக் கணக்குகளுடன், அனைத்தும் விரைவில் பொதுமக்களுக்காக வெளியிடப்படும் என அண்ணாமலை தெரிவித்து இருந்தார். 

    இந்நிலையில், பாஜக தமிழ்நாடு ட்விட்டர் பக்கத்தில், அக்கட்சி தலைவர் அண்ணாமலை, தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என பதிவிட்டுள்ளார். 

    பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள்; சைலேந்திர பாபுவுக்கு கெடு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....