மதுரை: மாநகராட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர் பானு முபாரக் வெற்றி பெற்றுள்ளதால் திமுகவினர் அதிர்ச்சியில் திகைத்துள்ளனர்.
கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றனர். இதில், திமுகவை சேர்ந்த ஒருவர் தான் மதுரையின் மேயர் என்பது உறுதியாகியுள்ளது.
இந்தநேரத்தில், மதுரை 47-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் மேகலாவை எதிர்த்து மு.க.அழகிரியின் ஆதரவாளர் முபாரக் மந்திரியின் மனைவி பானு போட்டியிட்டார். போட்டியிட்ட முபாரக் மந்திரியின் மனைவி பானு, பாஜக வேட்பாளரை விட 2,270 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதனால், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். திமுக ஆட்சிக்கு வரும்போது மு.க.ஸ்டாலினுடன் மு.க.அழகிரி இணைய போவதாக தகவல் வெளியானது. அதேசமயத்தில், திமுகவுக்கு எதிரான நடவடிக்கைகளை மு.க.அழகிரி குறைத்துக் கொண்டுள்ளார்.
இப்படி இருக்க மதுரை தேர்தலில் திமுக ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை களமிறக்கி வெற்றி பெறச்செயததன் மூலம் ‘மு.க.ஸ்டாலினுடன் அழகிரி மீண்டும் மோதல் போக்கை தொடர்கிறாரோ’ என்ற கேள்வி எழுந்துள்ளது.